அப்பாவிடம் மாட்டிய அத்தை மகள் அந்தரங்கம் Like

ஆனால் இதில் மரிக்கொழுந்து மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சின்ன வயதில் இருந்தே அவள் என்னை விட நன்றாக படிப்பாள். அதனால் நான் அவள் மேல் பெருமை தான் பட்டேனே தவிர பொறாமை பட்டது இல்லை. மேலும் பல பரீட்சைக்கு நான் தான் அவளுக்கு துணையாக அழைத்து போய் வந்து இருக்கிறேன். பல புத்தங்கங்களை அவளுக்காக தேடி பிடித்து வாங்கி கொடுத்த இருக்கிறேன். பல நேரம் அவள் இரவு வீடு திரும்ப நான் தான் அவள் கல்லூரிக்கே சென்று வாசலில் காத்திருந்து கூட்டி வந்து இருக்கிறேன். ஆனால் அவளுக்கு அப்போதே என்னை ஒரு எடுபிடி போல் தான் நினைத்து இருக்க வேண்டும். ஒரு நாளும் அவள் என்னிடம் ஆசையாக பேசியது இல்லை. நானும் அவளிடம் அதை எதிர்பார்க்க வில்லை.

நான் ஆயிரம் கனவுகள் காணலாம். நம் நேர்மை, நிதானம், சிந்தனையை பார்த்து காலம் பல கணக்குகளை போட காத்திருக்கும். திருமணம் ஆகி 6 மாதத்தில் மரிக்கொழுந்துக்கும் அவள் கணவனுக்கும் பிரச்சனை வந்து விட்டது. அவள் அம்மா வீட்டுக்கு வர, அவள் பின்னாடியே புருஷனிடம் இருந்து விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸும் வந்தது. இங்கே என் வீட்டில் அப்பாவும் பதட்டம் ஆனார். ஆனால் அம்மா அதை எல்லாம் கண்டும் காணாதது போல் இருந்தாள். அது கடவுளின் தண்டனை என்று அம்மா என்னிடம் புலம்பிய போது நான் அவளை கண்டித்தேன். ஆயிரம் பிரச்சனை இருந்தாலும அவ நம்ப அத்தை பொண்ணு அதனால உன்னால ஆறுதல் சொல்ல முடியாட்டியும், ஆத்திரத்துல வார்த்தையை கொட்டாதே. இப்போ நீ அமைதியா இருப்பது தான் முக்கியம் என்றேன்.

அப்போது அப்பா என்னிடம் இதை சொல்லி நல்ல வக்கீலா பார்த்து சொல்லுடா என்று சொன்ன போது நான் தலையை ஆட்டினேன். அது வரை பொறுமையா இருந்த அம்மா,
“ஓஹோ உங்க அக்கா பொண்ணு வாழவெட்டியா வந்து வீட்ல இருக்கும் போது கூட என் பிள்ளையா வக்கீலா உங்க கண்ணுக்கு தெரியலியோ. இப்போ அவ தனியா தான் கேஸ் நடத்தி கிட்டு இருக்கான். அதை கூட புரிஞ்சிக்காம அவன் கிட்டேயே வேறு நல்ல வக்கீலை கேட்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்.

ஆனா ஒண்ணு சொல்றேன் டே உனக்கும் சேர்த்து தான் மரிக்கொழுந்து கேஸ்ல நீ ஏதாவது முயற்சி எடுத்தாலும், நீயே வாதாடினாலும் அம்மாவை மறந்திடு. அம்புட்டு தான் சொல்வேன். நான் மானஸ்தி. இப்போ மட்டும் உறவு எந்த வாசல் வழியா உள்ளே வருதுனு பாக்குறேன்“ என்று அம்மா பழைய படி இறங்கி அடிக்க அப்பா வழக்கம் போல் பதுங்கி கொண்டார்.

ஆனால் எனக்கு மனசு கேட்காமல் என் வக்கீல் ஆபீஸிலிருந்து போன் போட டயல் பண்ணிய போதே அத்தையும், மரிக்கொழுந்தும் என் ஆபீஸ் வாசலில் கண்கலங்கி என்னை பார்க்க உள்ளே நுழைந்தார்கள். அப்போது கூட உறவு என் கண்ணை மறைக்க நான் அவர்களை அன்போடு அழைத்து பேசி ஆறுதல் சொன்னேன். அவர்கலும் மீயூசுவல் விவாகரத்து கேட்டு தான் வந்தார்கள். இருவரும் விரும்பி விட்டதால் அந்த கேஸை யார் வேண்டுமானாலும் நடத்தி விவாகரத்து வாங்கி கொடுக்க முடியும் என்பதால் அம்மாவோட உத்திரவை மீற முடியாமல் என் நண்பனை அழைத்து அந்த கேஸை டீல் செய்ய சொன்னேன். அப்போது அத்தை,

“உறவை விட பெருசு இந்த உலகத்துல இல்லனு எனக்கு இப்ப புரிஞ்சு போச்சுப்பா. படிச்ச புள்ள அவ விருப்பத்தை கேட்கணுமேனு தான் அப்போ நானும் மூளை மழுங்கிப்போய் எல்லாம் கண்ணை மறைச்சிடுச்சு. ஆனாலும் அண்ணிக்கு அவ்ளோ வருத்தம் இருந்தாலும் நீ அதை மனசுல வச்சுக்காக உதவுற பாரு உனக்கு எந்த குறையும் வராதுப்பா.

ஆனா உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன் நீயாது அத்தை வீட்டுக்கு வந்துட்டு போ. உன் கால் விழுந்து கூட மன்னிப்பு கேட்டுக்கிறேன்“ என்று அத்தை சொன்னபோது நான் கலங்கியபடி தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வழி அனுப்பினேன்.

நன்றி!

1 Comment

Add a Comment
  1. சூப்பர் சூப்பர் சூப்பர்
    நன்றி மறப்பது நன்றன்று நன்று அல்லது அதை அன்றை மறப்பது நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *