என்னை லாயரை கட்டிகிறியாடா கிரிமினல் கந்தா? Like

பிறகு நானே கந்தனை தேட ஆரம்பித்தேன். தினமும் அவனை பார்த்து, பேச துடித்தேன். காரணமே இல்லாமல் ஏதோ ஒரு கேசை பத்தி பேசுவதற்காக அவனை ஆபீஸுக்கு வரவைத்து மணிக்கணக்கில் பேசுவேன். ஆனால் அப்போது நான் கேஸ் நம்பரையும், சம்பவத்தையும் உளரும் போதே கந்தனே, கேஸ் நம்பர், செக்சன் நம்பர் வரை சொல்லி என்னை காதல் மயக்கத்தில் இருந்து தெளிய வைப்பான். ஒரு கட்டத்தில் அவனுக்கும் என் காதல் புரிய ஆரம்பித்து இருக்க வேண்டும். அதற்கு சாட்சியாக அவனுக்கு என் மேல் இருந்த நம்பிக்கை கூடிக் கொண்டே போனது.

சில நேரம் “மேடம் ரெடியாக இருங்க இப்படியொரு கேஸ் உங்க கிட்டே வரும்“ என்று சொல்லி வைத்துக் கொண்டு அப்படியொரு கேஸில் மாட்டி என்னிடம் வருவான். எனக்கு அதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அப்படி கேஸில் அவன் நலனுக்காக, அவன் ஆதாயத்துக்காகவே இருக்காது. யாருக்காகவோ சுயநலமின்றி பொதுநலத்தோடு உதவிக்கு போய் உபத்திரவத்தை வாங்கிக் கொண்டு வருவான். உதவி கேட்டவர்கள் நன்றி சொல்லி விட்டு நழுவி விடுவார்கள்.

நான் நஷ்டமடையும் கந்தனை கடிந்து கொள்ளும் போது, “அடப்போங்க மேடம், அவனவன் செய்யுற பாவத்துக்கு நிச்சயம் பழி இருக்கு. இதுல எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு மேடம். அடுத்தவங்களுக்கு உதவுறதே சுகமா இருக்கு. படுத்தா நல்ல தூக்கம் வருது, பசி எடுக்குது. அப்புறம் உங்களை மாதிரி ஒரு வக்கீல் பாதுகாப்பு இருக்கு அப்புறம் என்ன கவலை?” என்று நக்கலாக சிரிப்பான்.

அப்படியொரு கேசுக்காக கந்தன் என் அலுவலகத்துக்கு வந்து பேசிக் கொண்டு இருந்த போது தான் என்னோட முன்னாள் கணவன் எனக்கும் அவருக்கும் இருந்த ஒரு சிவில் கேஸ் விஷயமாக பஞ்சாயத்துக்கு என் அலுவலகத்துக்கே வந்தார். இருவருக்கும் சூடான விவாதம், வாக்குவாதமாக மாறி, பிறகு கைகலப்பில் என்னை கன்னத்தில் பளாரென்று அறைந்து விட்டார். அப்போது பக்கத்தில் இருந்த கந்தன் அவரை யார் என்று கூட தெரியாமல், அவருக்கும் எனக்கும் என்ன உறவு என்று கூட புரியாமல் என் முன்னால் கணவனை புரட்டி எடுத்த பந்தாடி விட்டான்.

அடி வாங்கி முன்னாள் கணவன், “யாருடி இவன், உன்னை அடிச்சா அவனுக்கு ஏன் கோபம் வருது. இப்போ புதுசா இவனை வச்சிருக்கியா, பாக்குறேன் எத்தனை நாளைக்குனு?” என்று என்னை கேவலமாக பேசி கந்தனை முறைத்த போது, ஆமாடா அவனைத் தான் வச்சிருக்கேன். அதை கேட்க நீ யாரு. உனக்கும் எனக்கும் சட்டப்படி எந்த சம்பந்தமும் இல்லைனு முடிவான பின்னாடி உனக்கு என்னை பத்த என்ன அக்கறை? நான் யாரு கூட இருந்தா உனக்கு என்ன? உன் வேலைய பார்த்துட்ட போ இல்லேனா இன்னும் வாங்கிக் கட்டுவே?” என்று நானும என் பங்குக்கு திட்டி என் முன்னாள் கணவனை விரட்டி விட்டேன்.
அன்று அவன் போன பிறகு தான் கந்தனுக்கு அவன் என் முன்னாள் கணவன் என்று தெரியும். அது தெரியாமல் அவனை அடித்து விட்டதற்காக கந்தன் என்னிடம் மன்னிப்பு கேட்ட போது நான் கண்கலங்கி கந்தன் மேல் பாய்ந்து அவன் மார்பில் சாயந்து இறுக்கி அணைத்து கொண்டேன். அந்த சூழலில் கந்தனும் என்னை முதுகோடு அணைத்துக் கொண்டான். அப்போது நான் கந்தனிடம், “அவன் என்னைத்தானே அடிச்சான் உனக்கு எதுக்குடா அப்படி கோபம்?” என்று கேட்ட போது,

“அவன் இல்லே மேடம் சாரி அவர் இல்லே மேடம் எந்த நாயி உங்களை பார்த்து குரைச்சா கூட வாலை ஒட்ட நறுக்கிடுவேன். முன்ன பின்னே தெரியாதவங்களுக்கே சப்போர்ட்டுக்கு போறவன் நான். நீங்க என்னோட குலசாமி மாதிரி. உங்க மேல கை வைச்சா விட்றுவேனா? பாத்தீங்கள்ள நீங்க மட்டும் தடுக்கலேனா இந்நேரம் அவன் தலை உங்க ஆபீஸ் வாசல்ல உருண்டிருக்கும். ஆனா பாருங்க நானும் லூசு மாதிரி புருஷன் பொண்டாட்டினு கூட பார்க்காம உங்க புருஷனை அடிச்சுட்டேனே. சாரி மேடம்?” என்று சொல்ல

நான் அவன் தலையில் குட்டி, “அவன் இப்போ என் புருஷன் இல்லேடா. விவாகரத்து பண்ணி விரிட்டியாச்சு. இப்போ எனக்கு பாதுகாப்பு தர்ற ஒரே புருஷன் நீ மட்டும் தான்டா. ஒரு பொண்ணுக்கு இப்படி ஆம்பளை தான்டா புருஷனா வரணும். எனக்கு நீ வரமாய் வந்திருக்கேடா என்னை கட்டிக்கிறியா?..“ என்று கேட்ட போது, என்னை அணைத்துக் கொண்ட கந்தனின் ஒரே கோரிக்கை.

“என்னை எல்லா கேசுலேய இருந்தும் விடுவிச்சு நிரபராதியா ஆக்கிடுங்க. ஒரு கிரிமினலா உங்க கழுத்துல தாலி கட்டி உங்க தொழிலுக்கும், வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருக்க விரும்பல..“ என்றான். அப்போது அவன் மேல் பாய்ந்து ஆரம்பித்த காமக்கூடல் காட்சி தான் இந்த கதையின் ஆரம்பமாக நீங்கள் படிக்க ஆரம்பித்தது. சூடு பறக்க மீண்டும் ஒரு முறை படித்து இன்புறுங்கள்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *