கண்ணாமூச்சி ரே ரே – 3 Like

“இந்தப்பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது..!!” – ஆவேசமாக கர்ஜித்தாள் குறிஞ்சி.

அடுத்தநொடியே.. கையிலிருந்த பந்தத்தை புவனகிரி தூக்கியெறிய.. குறிஞ்சியின் உடலில் குப்பென்று தீப்பற்றிக் கொண்டது..!! உயிருடன் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தாள் குறிஞ்சி.. உடனடியாய் சதைகள் பொசுங்கிப்போக, உள்ளடங்கிய ரத்தநாளங்கள் வெடித்து சிதறின..!!

“ஆஆஆஆஆஆஆஆஆ..!!” ஆவிகொதிக்க அலறி துடித்தாள் குறிஞ்சி.

மலையுச்சியில் சூறைக்காற்று இப்போது திடீரென சுழற்றி அடித்தது.. நிலையாக நிற்கக்கூட முடியாமல் அனைவரும் தடுமாறினார்.. கையை முகத்துக்கு முன்னர் கொண்டு வந்து காற்றை மறைத்தனர்..!!

“ஆஆஆஆஆஆஆஆஆ..!!”

அலறிக்கொண்டே குறிஞ்சி உடலை முறுக்கி திமிறினாள்.. கட்டி வைத்திருந்த கயிறு இப்போது இற்றுப்போய் அற்றுக்கொண்டது..!! அக்னிஜுவாலை பற்றி எரிய.. அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினாள் குறிஞ்சி..!! ஊர்மக்கள் மிரண்டு போய் அந்த கோரக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. திகுதிகுவென தீப்பற்றிய தேகத்துடன் மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்தாள்..!!

அடித்த சுழல்காற்றுக்கு.. அவள் நேற்று அணிந்திருந்த சிவப்பு நிற அங்கி.. எங்கிருந்தோ இப்போது பறந்து வந்தது..!! பள்ளத்தாக்கில் அவள் பாய்ந்த திசையிலேயே.. அந்த அங்கியும் வீழ்ந்து அவளுடன் பயணித்தது..!!

ஆயிரத்து ஐநூறு அடி உயரமான சரிவில்.. அங்கமெங்கும் எரிகிற நெருப்புடன்.. ஆங்காங்கே பாறைகளில் முட்டி மோதியவாறு.. குறிஞ்சி கீழே சென்று கொண்டேயிருந்தாள்..!! இறுதியாக சமதளத்தை அடைந்து.. குழலாற்றின் தெளிந்த நீரை கிழித்துக்கொண்டு தொப்பென்று விழுந்தாள்.. அந்த ஆறும் அதற்காகத்தான் காத்திருந்தமாதிரி அவளை தனக்குள் வாங்கி புதைத்துக்கொண்டது..!! பறந்து சென்ற சிவப்பு அங்கியும்.. அவள் விழுந்த இடத்திலேயே சென்று விழ.. ஆற்றுச்சுழல் அதனை உள்ளிழுத்துக் கொண்டது..!!

21

அத்தியாயம் 2

ஆண்டு: கி.பி 2013 (ரொம்ப யோசிக்காதிங்க.. இந்த வருஷம்தான்..!!)
இடம்: கங்கோத்ரி லேயவுட், மைசூர் மாநகரம்

“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே.. உத்திஷ்ட நரஸார் தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..!!”

காலைத்தென்றலுடன் கலந்து வந்த சுப்ரபாதம் காதுகளை வருட.. கண்ணிமைகள் மெல்ல அசைவுற்றன ஆதிராவுக்கு..!! அதிகாலை தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைய ஆரம்பிக்க.. விழிகளை மெதுவாக திறந்து பார்த்தாள்..!! சுற்றி ஒரு பார்வை பார்த்து சூழ்நிலை உணர முயன்றாள்..!! அவளது படுக்கையறை.. அருகில் படுத்திருக்கிற அவளது கணவன் சிபி, இப்போது பார்வைக்கு வந்தான்..!! வாயை ‘ஓ’வென்று திறந்து வைத்துக்கொண்டு.. களைத்துப்போன குழந்தை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான்..!! அகத்திலிருப்பவனை அந்தக்கோலத்தில் கண்டதும்.. ஆதிராவின் அதரங்களில் ஒரு மெலிதான புன்னகை..!!
கருவிழிகளை சற்று தாழ்த்தி பார்த்தபோதுதான்.. நிர்வாணமாக படுத்திருக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு வந்தது..!! அதிகாலை நான்கு மணி வாக்கில் மூன்றாவது முறையாக ஆடைகளைய நேர்ந்ததும்.. ஆட்டக்களைப்பில் திரும்ப அணிந்துகொள்ளாமல் அப்படியே உறங்கிவிட்டதும் ஞாபகம் வந்தது.. உடனடியாய் அவளுடைய முகத்தில் ஒரு வெட்கச்சிவப்பு..!! கீழுதட்டை மடித்து பற்களால் கடித்தவாறே.. அவளுடைய மார்புகள் இரண்டையும் அழுத்தியவாறு படர்ந்திருந்த சிபியின் கையை.. அவனுடைய உறக்கம் கலைந்துவிடாமல் மென்மையாக தன்னிடமிருந்து விலக்கினாள்.. மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்..!!

உடல் மிகவும் களைத்துப் போயிருந்ததை உடனடியாய் அவளால் உணர முடிந்தது..!! அவளுடைய அந்தரங்க பாகங்களில் எல்லாம் ஒரு புதுவித உணர்வு.. வலிக்கவும் செய்தது.. சுகமாகவும் இருந்தது..!! ஆண்மகன் தருகிற இன்பமது எப்படி இருக்கும் என்பதை, நேற்றிரவுதான் முதன்முறையாக அறிந்திருந்தாள்.. அந்த இன்பம் விழைவிக்கிற அதிகாலை விளைவு எப்படி இருக்கும் என்பதை, இப்போது உணருகிறாள்..!!

நேற்றிரவு தலையில் சூடிய மல்லிகைச் சரத்தில்.. இப்போது கணிசமான அளவு மெத்தையில் உதிர்ந்து கசங்கி போயிருக்க.. நார் மட்டுமே கூந்தலோடு பிரதானமாக பிண்ணியிருந்தது..!! ஆதிரா அதை தனியாக பிரித்தெடுத்தாள்.. கையில் வைத்து பந்தாக சுருட்டி, சற்று தூரத்தில் இருந்த குப்பைக் கூடையில், இங்கிருந்தே குறி பார்த்து எறிந்தாள்..!! காலுக்கடியில் கிடந்த பெட்டிக்கோட்டை இழுத்து இடுப்பை சுற்றி முடிச்சிட்டாள்.. கட்டிலின் ஓரமாக கிடந்த ப்ராவை எட்டி கையில் எடுத்தாள்..!! கணவன் தூங்குகிற அழகை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவாறே.. தனது கலசங்களை மூடி அந்த ப்ராவை அணிந்துகொண்டாள்..!!

சிபி இப்போது புரண்டு படுத்தான்.. கழுத்துவரை அவன் போர்த்தியிருந்த போர்வை மெல்ல விலகிக்கொண்டது..!! கணவனின் முழு உருவத்தையும் இப்போது காண நேர்ந்த ஆதிராவுக்கு.. உடனே மனதில் ஒரு திடீர் குறுகுறுப்பு..!!

‘இவன் எப்போது உடை அணிந்து கொண்டான்..?? எனக்கு நினைவிருக்கிறவரை எதுவும் அணியாமல்தானே இருந்தான்..?? இடையில் எழுந்திருப்பானோ..?? ஐயையோ..!! அப்படியானால்.. அவன் எழுந்தபோது நான் இதே கோலத்திலா கிடந்தேன்..?? வெளிச்சத்தில் பார்க்க நேற்றிரவு அவன் ஆசையுற்றபோது முடியாது என்று மறுத்தேனே..?? நான் உறங்குகையில் எழுந்து தன் ஆசையை தீர்த்துக்கொண்டிருப்பானோ..?? ஒட்டுத் துணியில்லாமல் நான்.. ஆஆஹ்ஹ்ஹ்க்.. என்ன நினைத்திருப்பான்..?? ச்ச.. ஷேம் ஷேம்..!!” சிலநொடிகள் அவ்வாறு ஒருவித அவஸ்தை உணர்வுக்கு ஆளான ஆதிரா, பிறகு..

‘என்னாயிற்று இப்போது..?? ஏன் இப்படி பதறுகிறாய்..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..?? உன் காதல் கணவன்தானே..?? உன் அழகு மொத்தத்தையும் ஆளுகிற உரிமையுள்ளவன்தானே..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..!!’ என்றொரு சிந்தனை தோன்றவும், சற்று சமாதானமானாள். அதற்குள்ளாகவே,

‘வெட்கமில்லாதவள் என்று ஒருவேளை நினைத்திருப்பானோ..??’ என்று ஒருமனது கிடந்து பரபரத்தது. உடனே,

‘நேற்றிரவு உன்னுடன் கூடும்போதே அது அவனுக்கு புரிந்திருக்கும்..!!’

என்று இன்னொரு மனது கேலியாக பதில் சொல்லவும், ‘களுக்’ என்று உடனடியாய் எழுந்த ஒரு சிரிப்பை ஆதிராவால் அடக்க முடியவில்லை.. வாயை பொத்திக்கொண்டு சப்தமில்லாமல் சிரித்தாள்..!!

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *