கனா கண்டேனடா – 5 Like

அவன் என் கொலுசை காணும் விதமாக நான் சம்மணமிட்டிருந்த காலை மெல்ல கட்டிலின் கீழே இறக்கி அவனுக்கு வலபக்கமாக திரும்பி அமர்ந்தேன். அவனுக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை. வயிற்றையும் இடுப்பையும் மூடியிருந்த சேலை லேசாக அகன்றிருந்தது. அவன் அருகிலிருக்கும்போது சரி செய்தால் நன்றாக இருக்குமா என்றொரு குழப்பம். casual ஆக சேலையை இழுத்து இடுப்பை மறைத்துவிட்டேன். ஒரு second அவன் பார்வை என் வயிற்றையும் இடுப்பையும் மார்பையும் வருடிச்சென்றது. நான் வெட்கி தரையை பார்த்தேன். இரண்டு second அறையே அமைதியாக இருந்தது.

“என்கூட பேசக்கூடாது ன்னு முடிவெடுத்துட்டு தான் வந்தியா”.. சிரித்துக்கொண்டே கேட்டான்.
நான் புருவங்கள் உயர்த்திப்பார்க்க… பக் என்று சிரித்து.. “என்ன மொறைக்கிரியா?” என்று கேட்க.. நானும் பக் என்று சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்.. பின் வலதுகையால் வாயை பொத்திக்கொண்டு, இடதுகையால் அவன் தொடையில் குத்த.. “ஆ” என்று வலிப்பதுபோல் நடித்தான். நான் வாயால் ஒழுங்கு காட்ட.. என் தொடையில் மென்மையாக குத்தினான்..

எங்களுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது.. நானே கேட்கலாம் என்று முடிவெடுத்து..“கொலுசு எப்படி இருக்கிறது?” சேலையை கணுக்கால் வரை தூக்கிக்காட்டினேன்.. குனிந்து பார்த்தவன்… “எங்கே கட்டில் மேலே கால் எடுத்து வை” என்றான்..

கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், இரண்டு கால்களையும் படுக்கையின் மேலே எடுத்து வைத்து அவன் கண்களை பார்த்தேன்.. என் வலது காலை அவன் இடது தொடையின் மேல் அவனாக எடுத்து வைத்துக்கொண்டான்… எனக்கு மனம் பதறி, காலை எடுத்தேன்.

“ஏன் காவ்யா ??” நா வரண்டது எனக்கு
“இல்லை.. நா பெட் லையே வச்சுக்கறேன்..”
“இங்க பாரு, இங்க நீயோ நானோ அடிமை இல்லே.. ரெண்டு பேருமே சமம் தான்.. ” ஆச்சர்யம் கலந்த இதயம் வேகமாக துடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

மீண்டும் என் வலது காலை எடுத்து வலது தொடையில் வைத்துக்கொண்டு… கொலுசு உரசிய இடத்தில், ஆட்காட்டி விரலால் மெல்ல கோடு வரைந்தான்.. எனக்கு கூசியது.. நெளிந்தேன்.. மெல்ல கால்களை எடுத்து தன் இடது கையில் தாங்கிப்பிடிப்பது போல் வைத்துக்கொண்டு. பாதங்களை வருட.. வெடுக்கென்று பாதங்களை உருவிக்கொண்டேன்.. “கூசுது” சிணுங்கினேன்.
“காலும் அழகா தான் இருக்கு” குறும்பாக சிரித்தான்.

‘காலும்’ என்று அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, வெட்கத்தில் முகம் சிவந்து தொடையில் மீண்டும் ஒரு குத்து குத்தினேன்.

“இப்போ தெரியுதா முதல்ல எதுக்கு குத்தினேன் ன்னு…” வெட்கம் மாறாத சிரிப்பில் சொல்ல..
அவனும் சிரித்து “காலை மட்டுமாவது இன்னைக்கே புடிசிக்கரனே..” என்று கேட்க..
“இனிமே நா இங்க இருந்தா எனக்கு guarantee இல்ல.. நா கெளம்புறேன்”.. நான் சிரித்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழ. என் கைகளை மெல்லக்கோர்த்து என் கண்களில் ஆசையாக பார்த்தான்.. “ஒரே ஒரு தடவை உன்ன கட்டிக்கட்டுமா காவ்யா” ஏக்கமாக என் கண்களில் பார்த்தான். ஒரு நிமிடம் என் இதயமே நின்று போனது. எவ்வளவு ஆசைகளுடன் இருக்கிறான் என்னவன்.

ஆனால் எல்லை மீறிவிடக்கூடதே… ஆசையாக அழைக்கும் காதல் கணவனிடம் ‘இல்லை’ என்று ஒதுக்கித்தள்ளும் மனத்திடம் எனக்கு இருந்திருக்கவில்லை. ஆனாலும் இதற்கு நானும் ஒரு காரணமோ. நான் தான் அவரை பார்க்க வந்திருக்க கூடாதோ. கண்களில் நீர் முட்டி, குரல் உடைந்தது.

“இந்த ஜென்மம் மட்டுமில்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்களுக்கு தான்.. ஆன இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோங்க… pls..”
கோர்த்திருந்த கையை மெல்ல பிரித்தான்… இறுகிய மனதுடன் நான் வாசலை நோக்கி நடக்க.. என் மனம் என்னைப்பார்த்து கேட்டது… ‘என்றிலிருந்து நீ கல்நெஞ்சக்காரியானாய் காவ்யா.. உன்மேல் காதல் கொள்ளவைத்து, உருகிதவிக்கும் உன் காதல் கணவன் உன்னை ஒரே ஒருமுறை அணைத்துக்கொள்ளவா என்று தானே கேட்டான். உறவுகொள்ள வா என்று அழைக்கவில்லையே. அவனின் காதல் கண்ணியத்திற்கு நீ கொடுக்கும் காதல் பரிசு இந்த நிராகரிப்பு தானா?’.

மனம் தாங்க வில்லை. வாசல் வரை வந்த நான் திரும்ப ஓடிச்சென்று அவனை இறுக்க கட்டிக்கொள்ள.. என் கண்களிலும் அவன் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.. மனம் மயிலிறகை போல் மாறியது. காலையிலிருந்தே அவஸ்தையை தந்த என் மார்பக காம்புகள் அவன் நெஞ்சில் அழுத்த, அவஸ்தைகள் இன்ப அவஸ்தைகளாக மாறின. காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான மெல்லிய கோட்டை நாங்கள் தொட்டுவிட்டதை உணர்ந்தேன்.
என்னுள் மோக ஊற்று உருவாகி ஆறாக மாறி என்னவன் என்னும் கடலில் கலந்து சாந்தியாவது எப்போது என்று மனம் எங்க துவங்கியிருந்தது…

ஒரு நாள் கூட காத்திருப்பேன்….

நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்… இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களுடைய கருத்துக்களை அனுப்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *