கனா கண்டேனடா – 8 Like

“ஓ…” எனக்கு உண்மையிலேயே தெரியாது… இப்போது அவனிடம் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை…
வெளியே வந்தேன்… பதில் எதிர்பார்த்து காத்திருந்தான் என்னவன்…
“இன்னைக்கு வெளிய போகமுடியாதாம் ல”
“ஓ…” அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை.

“நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் காவ்யா…” அவன் குரல் இடறியது…
ஒரு கணம் என் இதயம் நின்றே போனது…
என்னை என் கணவன் மனதார காதலிப்பதும்.. என்னை மிஸ் செய்வதும்… ஆணுக்குரிய கர்வத்தை விட்டு அதை என்னிடம் சொல்வதும்… பெண்ணுக்கே உரிய பெருமை அல்லவா…

ஒரு ஐடியா நினைவுக்கு வர… “ஒரு நிமிஷம் pa…” என்று சொல்லி அம்மாவிடம் சென்றேன்…
“அம்மா.. பரண் ல என்னோட பழைய போட்டோ அவார்ட் எல்லாம் இருக்கில்லே.. அதை அவர்ட்ட காட்டவா?” கொஞ்சம் மென்மையாகவே சொன்னேன். காரணம் என் மனம் இளகி இருந்தது..
ஒரு கணம் என்னை கூர்மையாக பார்த்தவள்.. என்னிடம் இருந்த தவிப்பை உணர்ந்திருக்க வேண்டும்.. “சரி ஏதோ பண்ணு.. அப்பா மதிய சாப்பாட்டுக்கு வர்றதுக்குள்ள கீழ வந்துரனும்…” கண்டிப்பாக சொன்னாள்… அவள் சொன்னதன் வீரியம் எனக்கும் புரிந்திருந்தது…

வெளியே சென்றேன்… என்னவன் ஏக்கத்தோடு என்னை பார்க்க… “பரண் ல என்னோட பழைய photos இருக்கு.. பாக்கலாமா?” என்றேன்… அவன் முகத்தில் ஒரு நிம்மதி…
நீங்க பரண் படிக்கட்டு கீழ wait பண்ணுங்க நான் 2 நிமிஷத்துல வந்துடறேன்.. அவசரமாக அறைக்குள் ஓடி.. bathroom க்குள் சென்று.. அவ்வளவு நேரம் அவஸ்தையை தந்த ஜெட்டி யை கழட்டி கொடியில் போட்டேன்.. நேற்று காயபோட்ட இளஞ்சிவப்பு நிற ஜட்டி யை அணிந்து nighty யை சரி செய்தேன்…
வேகமாக ஓடினேன்.. பரணுக்கு..

அவர் கீழே எனக்காக காத்திருந்தார்.. அவர் கண்களை பார்த்து சிரித்தேன்.. இருவருக்குமே மனம் இறுகியிருந்தது. உடைந்த மனதுடன் புன்னகைத்துக்கொண்டோம்..
எதையாவது பேசி இறுக்கத்தை குறைக்கவேண்டும்…
“படி கொஞ்சம் ஆடும்… நான் கீழ பிடிச்சுக்கறேன்.. நீங்க முதல்ல ஏறுங்க…”
“அப்புறம் நீ ஏறுறது கஷ்டமாயிடுமே…” கனிவாக என்னை பார்த்து புன்னகைத்தார்.
இறுக்கங்கள் தளர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன்… ஏதோ என்னால் செய்ய முடிகிறது என்பதே மகிழ்ச்சியாக இருந்தது…

“சேர்ந்து ஏற முடியாதே…” சிரித்தேன்..
உண்மையாக மனம் திறந்து சிரித்தார்…
இதுவே எனக்கு போதும்… இனி மனம் விட்டு பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது…
“முதல்ல நீங்க ஏறிட்டு, என் கைய பத்திரமா பிடிச்சு ஏத்துங்க… ஏத்துவீங்களா?” கண்ணை குறுக்கி சிரிக்க…
“கண்டிப்பா…” அவரும் சிரிக்க…

“சரி ஏறுங்க…” எதேச்சையாக பிடிப்பது போல… அவர் arms ஐ பிடித்து இழுத்து சிணுங்கினேன்…
அவர் சிரித்துக்கொண்டே… படிகளில் ஏற… நான் கெட்டியாக பிடித்துக்கொண்டேன்… என் உயிரல்லவா அவன்…

அவர் ஏறிய பிறகு.. என் கைகளை எட்டிபிடிக்க.. நான் என் உடலை எம்பி கைகளை நீட்ட… nighty யின் கழுத்து இடைவெளி வழியே, குளிர்காற்று என் தாலி படர்ந்த மார்பிடுக்கை குளிர்வித்தது… ஏதோ தோன்றி மேலே பார்க்க.. என்னவன் என் மார்பழகை தரிசித்துக்கொண்டிருந்தான்… உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும், காணாததைபோல் இருந்தேன்…

உண்மையில் அன்றைய black டீ நிகழ்வுக்கு பிறகு என் உடலும், அவன் கண்களின் தீண்டலுக்காகவும், விரல்களின் சீண்டலுக்காகவும் ஏங்கிதுடித்தது….

(தொடரும்)

அன்பு நண்பர்களே சில குடும்ப நிகழ்வுகளால் regular ஆக எழுத முடியாமல் போனது எனக்கும் வருத்தமளிக்கிறது. காத்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *