சுவாதி எப்போதும் என் காதலி – 13 Like

உனக்கு வேணும்னா ஒரு ஆம்பிள துணை இல்லாம இருக்கலாம் ஆனா இவனுக்கு அப்பா வேணாமா என்று அஞ்சலி கேட்டாள் ,அதை கேட்ட உடன் சுவாதிக்கு சூர் என்று தலையில் உரைத்தாலும் அவள் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இவனுக்கு அப்பன் வேணும் தான் ஆனா இவன் அப்பனுக்கு தானே இவன் வேண்டதாவனா இருக்கான் என்றாள் .நீ பாத்தியா அவனுக்கு இவன பிடிக்கலன்னு என்றாள் அஞ்சலி , ஆமா அவன் எப்பயுமே சொல்வான் எனக்கு குழந்தைகனாலே அலர்ஜின்னு என்றாள் சுவாதி ,என் புருஷன் கூட தான் சொல்வாரு ஆனா அதலாம் அவர் குழந்தை பிறந்த பிறகு மாறிட்டாரு என்றாள் ,ஆனா இவன் மாற மாட்டான் அதுனால இந்த பேச்ச விடுங்க என்றாள் சுவாதி , தொடர்புக்கு..

[email protected] சரி எப்ப தான் வரனா உன் ஆளு என்றாள் அஞ்சலி ,எனக்கு என்ன தெரியும் நான் என்ன அவன் பொண்டாட்டியா இல்ல லவ்வரா என் கிட்ட போன் பண்ணி பேசி நான் இன்னும் ஒரு நாள்ல வந்துடுவேன் 2 நாள்ல வந்துடுவேன்னு சொல்றதுக்கு அவன் என்ன பண்றான்னு கூட தெரியாது இப்ப எனக்கு என்றாள் ,அவன் உயிரோட தான் இருக்கானா இல்லையான்னு கூட தெரியல (ஐயோ விக்கி இப்படி சொல்றதுக்கு என்னைய மன்னிச்சுடுடா என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டாள் .

சீ நீ எல்லாம் மனுசியா இல்ல கல்லா என்றாள் அஞ்சலி வெறுப்போடு ,சந்தேகம் இல்ல நான் ஒரு கல்லுதான் என்றாள் சுவாதி , நீ ரொம்ப பேசுரடி இருடி இன்னைக்கே அவன் வரணும் வந்து உன்னயவும் உன் குழந்தையவும் கொஞ்சனும் குறிப்பா உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கணும் இதலாம் போயி கடவள் கிட்ட கேக்க கூடாது இருந்தாலும் நான் கேக்குறேன் என்றாள் அஞ்சலி .

அவன் எதுக்கு என்னைய உண்டு இல்லன்னு பண்றான் என்றாள் .ஏன்னா உன் புப்ஸ் தான் நல்லா பெருசாகிடுசே அதுக்கே என்ன பண்றானோ என்றாள் .அக்கா ஏன் என்று செல்லமாக கோபித்தாள் .யே ஒரு வேல அவன் அப்படி வந்தா தடுத்துடாதடி பாவம் ஏங்கி போயிடுவான் என்றாள் அஞ்சலி ,அவனா ஏங்கி போயிடுவான் அவன் இந்நேரம் அமெரிக்கால எந்த ஏஞ்சலினா ஜூலி கூட இருக்கானோ நான் தான் ஏங்கி போயிருக்கேன் என்றாள் சுவாதி , பின் இருவரும் காரில் ஏறினார்கள் .யே பேசாம நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா என்றாள் அஞ்சலி ,ஐயோ வேணாம் அக்கா ஏற்கனவே உங்க ஐடியாவால தான் இந்த 1 வருஷம் இவன் கூட தங்கி இவன் மேல லவ்வுல விழ வேண்டியதா போச்சு இல்லாட்டி இந்நேரம் குழந்தைய மட்டும் பெத்துட்டு நான் நிம்மதியா இருந்து இருப்பேன் என்றாள் சுவாதி ,

இருடி அதே லவ்வ டேவலாப் பண்ண வைக்கிறேன் என்றாள் அஞ்சலி ,ஒன்னும் வேணாம் அக்கா என்றாள் சுவாதி ,அட் லிஸ்ட் அவனுக்கு உன் ஆள் மேல லவ் இருக்கான்னு ஆச்சும் தெரிஞ்சுக்கிறாலம் என்றாள் அஞ்சலி .சரி சொல்லுங்க என்றாள் ,நீ என்ன பண்ற அவன் வந்ததுக்கு அப்புறம் நான் சொல்ற மாதிரி பண்ணு ,,, வீட்டிற்கு சென்ற போது சுவாதிக்கு விக்கி வந்தது எதுவும் தெரியவில்லை ,ஏன் என்றால் அவன் தனியார் காரில் வந்து இருந்தான் .அவன் அவன் ரூமில் பயன களைப்பில் அடித்து போட்டார் போல் தூங்கினான் . ஒரு மணி நேரம் கழித்து குழந்தை அழுகுரல் கேட்டது ,

சுவாதி குழந்தைக்கு அப்போது தான் பால் கொடுத்து இருந்ததால் அவன் எதுக்கு அழுகிறான் என்றே தெரியவில்லை .சும்மா கொஞ்ச நேரம் உன் தோள்ல போட்டு ஹால்ல அங்கிட்டும் இங்கிட்டும் நடடி என்று அஞ்சலி சொல்ல அவளும் என்னடா செல்லம் ஏன் அழுகுற அழுகாத அம்மா இருக்கேன்ல என்று அங்கிட்டும் இங்கிட்டும் நடக்க அவன் அழுகையை நிறுத்த வில்லை . உள்ளே இருந்த விக்கிக்கு ஏதோ சுவாதி டிவி பார்க்கிறாள் என நினைத்து கொண்டே சுவாதி டிவி சவுண்ட குறைச்சு வை அப்படின்னு ரொம்ப மெல்ல போதைலே முனகுற மாதிரி முனகுனான் .

ஒரு ரெண்டு மூனு தடவ அப்படியே சொல்லிட்டு அதுக்கு மேலயும் சத்தம் பொறுக்க முடியமால் விக்கி கோபத்தோடு எழுந்தான் .ரூம் கதவை திறந்து யே சுவாதி சவுண்ட குறைச்சு வைச்சு டிவி பாக்க மாட்ட என்று கதவை திறந்து வெளியே வர அந்நேரம் என்னடா செல்லம் பசிக்குதா அம்மா கிட்ட வா என்று தன் பிராவை ஒதுக்கி விட்டு தன் குழந்தைக்கு தன் மார்பில் பால் கொடுக்க விக்கியும் சுவாதியும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டனர் ,ஹ சாரி நான் நீ நீ அது பண்றேன் தெரியாம வந்துட்டேன் நான் நான் திரும்ப ரூமுக்குல்ல போயிக்கிறேன் என்று அந்த பக்கம் திரும்பியவாறே சொல்ல ம்ம் சரி விக்கி என்று மட்டும் சொன்னாள் ,

விக்கி திணறி கொண்டே அவன் ரூம் கதவை திறக்க முயற்சிக்கும் போது ஆஆ பொறுக்கி என்று கடிக்காதடா என்று சுவாதி சொல்ல விக்கி தன்னை தான் பொறுக்கி என்று சொல்கிறாள் என்று நினைத்து திரும்பி என்னது என்றான் ,உன்னைய இல்ல விக்கி இங்க என்றாள் சுவாதி.அது சரி சில நேரங்கள குழந்தை அப்பா மாதிரி தான் இருக்கும் என்று அங்கு இருந்த அஞ்சலி சொல்ல விக்கி ஒன்றும் சொல்லமால் அமைதியோடும் அதிர்ச்சியோடும் மெல்ல அவன் ரூம் பக்கம் போனான் ,

அக்கா சும்மா இருக்க மாட்டிங்க என்றாள் சுவாதி அஞ்சலியிடம் . அத விடுடி எப்பேர்பட்ட ஆம்பிளையா இருந்தாலும் தனக்கு குழந்தை பிறந்தா எல்லாத்தையும் மறந்து குழந்தைய பாப்பங்கே ஆனா உன் ஆள் என்ன எட்டி கூட பாக்க மாட்டிங்குறான் என்றாள் அஞ்சலி ,நான் தான் சொன்னேனே அவனுக்கு குழந்தைகனாலே பிடிக்காதுன்னு என்றாள் சுவாதி ,அதுக்குன்னு சொந்த குழந்தையுமா என்றாள் அஞ்சலி ,அவனுக்கு எல்லாமே ஒரே குழந்தை தான் அப்புறம் என்ன என்றாள் சுவாதி ,

ஓகே ஒரு வேல நான் இருக்குறதால உன் ஆள் வராம இருந்து இருக்கலாம் ,சரி நான் போறேன்ப்பா இனி நீயாச்சு உன் புருஷன் ஆச்சு என்றாள் அஞ்சலி ,அக்கா இருங்க அக்கா என்றாள் சுவாதி ,போடி நான் போயி இனி மேல் ஆச்சும் ஆபிஸ் வொர்க் பாக்கணும் என்று சொல்லி விட்டு சுவாதியின் பதிலுக்கு எதிர்பாரமால் அஞ்சலி கிளம்பி சென்றாள் . உள்ளே சென்ற விக்கிக்கு என்ன பண்ணுவது என்றே புரிய வில்லை ,என்னடா இது நிஜமாவே எனக்கு குழந்தை பிறந்துருச்சா என்னால நம்பவே முடியலையே .

ஐயோ குழந்தைங்கனாலே எனக்கு அலர்ஜி ஆச்சே ,சரி குழந்தை பிறந்த்துனால இப்ப என்ன நடக்க போகுதோ நான் ஏற்கனவே பிரகாஸ் மேனனுக்கு பயந்து ஊர விட்டு ஓடலாம்னு பாக்குறேன் ,இதுல என்னனா இவ குழந்தைய ஒரு வழியா பெத்துட்டா இப்ப போனா அவளவு தான் குழந்தைய கொடுத்துட்டு ஏமாத்திட்டேன்னு சொல்வங்கேலே இப்ப என்ன பண்ண அதே நேரத்துல நான் கடந்த 8 வருசமா இந்த குழந்தை பொண்டாட்டி குடும்பம்னு சிந்திச்சதே இல்லையே இப்ப என்ன பண்ண இப்படி அவன் நினைத்து கொண்டே இருந்தாலும் பயண களைப்பில் தூங்கி விட்டான் .
ஒரு மதியம் 3 மணி போல முழித்தான் .முழித்த பின் பசி ஓவராக இருந்தது ,பசி ஒரு பக்கம் இருந்தாலும் 10 நாள் கழித்து வந்ததால் அவனுக்கு சுவாதியின் முகத்தை திரும்ப பார்க்க வேண்டும் என்றும் அவனுக்கு ஒரு ஆசை அதே நேரத்தில் குழந்தை பற்றிய பயமும் இருந்தது ,சரி ஒரு வேல குழந்தைய பத்தி அவ எதுவும் சொல்றதுக்கு முன்னால நாம ஏண்டி நம்ம விசயத்த என் பிரண்ட்ஸ்களுக்கு லீக் பன்னன்னு சொல்லி சண்ட போடுவோம் ,ஆனா இப்பதைக்கு அவள பாத்தா போதும் என்று நினைத்து கொண்டு மெல்ல ரூம் கதவை திறந்தான் வெளியே வந்து ரூம் கதவை தட்டலாமா வேணாம் என்று யோசித்து கொண்டே ஹாலில் நின்றான் .சரி போகலாம் என்று நினைக்கும் போது சரியாக சுவாதி கதவை திறக்க இருவரும் பார்த்து கொண்டனர் ,சுவாதி மிகவும் நார்மாலக ஹ விக்கி என்றாள் .

விக்கிக்கு தான் உதறல் எடுத்தது .ஹ ஹ சுவாதி சுவாதி என்று திணறினான் ,அப்புறம் என்றாள் , அப்புறம் அப்புறம் என்று விக்கி திணற சும்மா எதுனாலும் சொல்லு விக்கி என்றாள் ,அவளே சொல்லிட்டா அப்புறம் என்ன சொல்றா ஐ லவ் யுன்னு என்று மனசு சொல்ல ஆனா வெளியே வார்த்தை வரவில்லை ,இல்ல நான் காலைல இருந்து சாப்பிடல அதான் நீ ஏதும் பண்ணி வச்சு இருக்கியா என்றான் , ஒ இவளவு தானா கொஞ்சம் பொறு அவனும் இப்ப தான் தூங்கி இருக்கான் நான் எதாச்சும் பண்றேன் என்றாள் ,அவன்னா யாரு என்றான் ,ஒ அது அது என் பையன் என்றாள் .ஒ இருவரும் அமைதியாக இருக்க சரி நான் போயி எதாச்சும் உடனே வர மாதிரி சமைக்கிறேன் நீ ஒரு கால் மணி நேரம் டிவி பாரு என்றாள் .

சரி என்று சொல்லி விட்டு டிவியில் உக்காந்தான்.விக்கி சவுண்டு அதிகமாக வைக்க சுவாதி விக்கி விக்கி என்றாள் , ம்ம் கொஞ்சம் சவுண்ட குறைச்சு வையேன் அப்புறம் எந்திரிசுடுவான் என்றாள் .ஓகே சாரி என்றான் ,இட்ஸ் ஓகே என்றாள்.பின் அவள் சமைத்து முடித்து சாப்பாடை கொண்டு வந்தாள் ,சாரி விக்கி வீட்ல காய் எதுவும் இல்ல அதுனால வெறும் பருப்பு மட்டும் தான் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றாள் .அட நீ வேற எனக்கு இருக்க பசிக்கு நான் எதா வேணும்னாலும் சாப்பிடுவேன் என்று அதை வாங்கி விக்கி வேக வேகமாக சாப்பிட்டான் பையன் என்ன ஒரு வாரமா சாப்பிடாதவன் மாதிரி சாப்புடுறான் என்று சுவாதி நினைத்தாள் ,

விக்கி ரசித்து சாப்பிட்டு கொண்டே சே இந்த சாப்பாடு நல்லா இருக்கு எங்க அம்மாவுக்கு அப்புறம் உன் சாப்பாடு தாண்டி எனக்கு பிடிச்சு இருக்குன்னு விக்கிக்கு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா சொல்ல முடியல .அவன் சாப்பிட்டு முடித்து விட்டு வெறும் தேங்க்ஸ் மட்டும் சொன்னான் ,சே இத கூட சொல்ல முடியல நான் எப்படி இவ கிட்ட என் லவ்வ சொல்ல ஒரு வேல சொல்லி அவ மாட்டேன்னு சொல்லிட்டா என்னாலாம் மூனாவது காதல் தோல்வி ஏத்துக்க மனசு இல்ல என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான் , விக்கி ரூமுக்கு போகலாம் என்று நினைத்த போது சுவாதி விக்கியை கூப்பிட்டால் .ஹ விக்கி உன் கிட்ட கொஞ்ச நேரம்சில விஷயங்கள் பேசணும் ஏன்னா அவன் தூங்குரப்ப மட்டும் தான் பேச முடியும் சோ பேசலாமா என்றாள் சுவாதி ,

தொடர்புக்கு..
ஆதாரவு தாருங்கள்…
நன்றி…..

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *