சுவாதி எப்போதும் என் காதலி – 24 Like

இதுக்கு தான் நான் யார் கிட்டயும் பாசம் வைக்கிறது இல்ல பாத்திங்களா என்ன ஆச்சுனு அன்னைக்கு நான் சொன்னப்ப நான் நம்பள என்றாள் சுவாதி. சரி விடுடி அழுகாத முதல அவனக்கு என்ன ஆச்சுன்னு கேப்போம் என்று சொல்ல உடனே சுவாதி எழுந்து அங்கு வந்த டாக்டரிடிம் டாக்டர் என்ன ஆச்சு அவருக்கு என்றாள் பயந்து கொண்டே.

கொஞ்சம் டிபிகல்ட் தான் அவர் வயித்துல பலமா ஏத்தி இருக்காங்க அதுனால அவருக்கு வாய் வழியா ரத்தம் வந்து கிட்டே இருக்கு நல்ல வேல அவர் o பாசிடிவ்நாள ரத்தம் கிடைக்குது. இல்லாட்டி கஷ்டமாகிருக்கும் இனி அவர் நாளைக்கு காலைல வரைக்கும் மயக்கமா இருப்பாரு அதுக்கு அப்புறம் நார்மல் ஆகிடுவாரு என்று டாக்டர் சொல்ல.

சுவாதி கண்ணாடி வழியே எட்டி பார்க்க அங்கு விக்கி இருமி இருமி ரத்தத்தை துப்பி கொண்டு இருந்தான். அதை பார்த்து சுவாதி தலையில் அடித்து கொண்டு ஏண்டி சுவாதி இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்துற எதுக்குடி நீயாலம் பிறந்த என்று சொல்லி அழுது கொண்டு இருந்தாள். அஞ்சலி அவளை தேற்றி கொண்டே சரி உன் அப்பாவுக்கு எப்படி நீ இங்க இருக்கிறது தெரியும் என்று கேட்க சுவாதி கண்களை துடைத்து கொண்டாள்.

அக்கா குழந்தைய கொஞ்ச நேரம் பாத்துங்கோங்க நான் இப்ப வந்துடுறேன் என்றாள் சுவாதி. எங்கடி போற என்று அஞ்சலி கேட்க இந்தா வந்துறேன் அக்கா அரை மணி நேரத்துல என்று சொல்லி விட்டு சுவாதி சோகத்தை மறந்து இப்போது கோபமாக நடந்தாள்.

சுவாதி நேராக மணி வீட்டிற்கு சென்றாள். பலமாக கதவை தட்டினாள் வள்ளி கதவை திறந்தால். ஹ என்ன ஆச்சுடி இன்னேரம் வந்து இருக்க ரொம்ப ஒரு மாதிரி வேற இருக்க என்றாள். மணிய எங்க கூப்பிடுடி என்றாள் சுவாதி. என்னடி என்ன ஆச்சு என்றாள் வள்ளி. கூப்பிடு என்று கத்தவும்.

வாடி எதுவா இருந்தாலும் உள்ள போயி பேசிக்கிருவோம் என்றாள் வள்ளி. நீ முதல மணிய கூப்பிடு என்றாள் சுவாதி. என்னக என்னக என்று வள்ளி கத்த உள்ளே இருந்து ஒன்றும் பதில் வரமால் இருக்கவே தூங்கி இருப்பார் பொறு நான் போயி பாக்குறேன் என்று உள்ளே போயி பார்த்தாள்.
என்னங்க என்னங்க என்றாள். மணி முதலில் தூங்குவது போல் நடித்தான். வள்ளி அவனை அதிகமாக உலுக்கவும் என்னடி என்றான் மெல்ல. சுவாதி எதுக்கோ உங்கள கூப்பிடுரா என்றாள். நான் நல்லா தூங்கிட்டென் சொல்லு என்றான். என்னங்க பண்ணிங்க நீங்க ஏன் இப்ப அவ உங்கள தேடுறா நீங்க ஏன் அவளுக்கு பயந்து இப்படி நடிக்கிரிங்க என்று வள்ளி கேட்க

யே சொன்னத மட்டும் செய் அவள சீக்கிரம் வெளிய அனுப்பு என்றான் கோபத்தோடு. இல்லங்க எதுனாலும் என்று வள்ளி சொல்ல ஹ சொன்னா கேக்க மாட்ட போடி போயி சொல்றத செய்டி என்று கோபமாக கத்த அது வெளியே நின்ற சுவாதிக்கு மெல்ல கேட்டது.

அவளே கத்தினாள். நீ வர வேணாம் மணி எனக்கும் உன்னைய பாக்க பிடிக்கல மணி ஆனா ஏன் இப்படி பண்ண மணி ம்ம் அத மட்டும் சொல்லு ஏன் இப்படி பண்ண என்று சுவாதி அழுது கொண்டே கத்த வள்ளி வந்து என்னடி ஆச்சு என்றாள். நீ பேசாம இருடி.

அவன் எப்பயுமே உங்கள நல்லா பிரண்ட்சா தாண்டா நினைச்சான் இன்னைக்கு வரைக்கும் நீங்க பேசாததல தினமும் அழுகுராண்டா. எங்க போனாலும் உங்களுக்குன்னு எதாச்சும் வாங்கிட்டு வருவான்டா அவன போயி ஏண்டா இப்படி பண்ணிங்க.

பிரெண்ட்ஷிப்க்கு எப்பவுமே மரியாதை கொடுக்குறவன்டா இன்னும் வெக்கத்த விட்டு வெளிப்படையா சொல்ல போனா. அன்னைக்கு நைட்டு நடந்ததுக்கு நான் தான் முழு காரணம் விக்கி நான் டேவிட் லவ்வரா இருந்த காலத்துல என்னைக்குமே என்னைய திரும்பி கூட பாத்தது இல்லடா இன்னைக்கும் உங்களால தாண்டா அவன் என் கிட்ட ஒழுங்கா பேச கூட மாட்டின்கிறான் அவன போயி எப்படிடா உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லடா.

என்ன தாண்டி ஆச்சு என்று வள்ளி கத்த சுவாதி அவளை கண்டுகொள்ள வில்லை. ஆனா ஒன்னு மணி உனக்கு சொல்லி கொடுத்தவன் இப்படி சொல்லி இருப்பன் அவன உன் வீட்டுக்குள்ள விட்ட உன் பொண்டாட்டியவும் தொட்டுடுவான்ன்னு ஆனா நான் சொல்றேன். அவன் தான் அப்படி ஆள் என் விக்கி பொறுக்கியா இருந்தாலும் இது வரைக்கும் அடுத்தவன் லவ்வரன்னு தெரிஞ்சா அவள தொட கூட மாட்டான்.

அப்புறம் ஏன் என்னைய தொட்டான்னு நீயும் உன் நண்பனும் நினைக்காலம் நான் ஒன்னும் விக்கியோட நண்பனின் முன்னால் காதலி இல்ல. நான் எப்பவுமே விக்கியோட காதலி தான் நான் முத தடவ இந்த மும்பைல விக்கிய பாத்ததுல இருந்து அவன் தான் என் மனசுல இருக்கான். கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் மணி அவனுக்கு மட்டும் எதுவும் ஆச்சு உன்னைய அந்த நாய அப்புறம் என் அப்பன 3 பேரையும் நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்லி விட்டு வேகமாக நடந்தாள்.

என்னடி ஆச்சு விக்கிக்கு சொல்லுடி என்று வள்ளி கேட்க ம்ம் போடி போயி உன் புருசன கேளு என்று சொல்லி விட்டு வேகமாக சுவாதி போனாள்.

எங்க என்ன தாங்க பண்ணிங்க சொல்லுங்க என்று வள்ளி கேட்க போடி எனக்கு வர கோபத்துக்கு எதாச்சும் பண்ணிட போறேன் என்றான் மணி. கொல்லுங்க அப்படியாச்சும் போயி தொலையுறேன் ஒரு நல்லவர கல்யாணம் பண்ணேன்னு நினைச்சேன் இப்ப தான் தெரியுது என்று சொல்ல மணி போடி வெளிய என்று கத்தினான்.

தொடரும்.

ஆதரவுக்கு நன்றி…????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *