சுவாதி எப்போதும் என் காதலி – 25 Like

அக்கா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா என்றாள். என்ன ஹெல்ப்டி சொல்லு என்றாள் அஞ்சலி. அக்கா இனிமேல் விக்கி அங்க வேலை பாக்க மாட்டான் அதுனால உங்க புருஷன் தான் டெல்லில கமிசனர் ஆச்சே அங்க ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா என்றாள். அதோட எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ண முடியுமா என்றாள். சொல்லு என்றாள் அஞ்சலி.

சுவாதி சொன்னதை கேட்டு வேணாம்டி நீ தப்பான முடிவா எடுக்குற சொன்னா கேளு என்றாள் அஞ்சலி. இல்ல அக்கா இத விட்டா வேற வழி இல்ல. போதும் அவன் என்னால கஷ்டப்பட்டது அவன் பாட்டுக்கு நிம்மதியா பேச்சிலர் லைப் வாழ்ந்து கிட்டு இருந்தான்.

நான் தான் கெடுத்துட்டேன். போதும் என்னால இத்தன பேர் கஷ்டப்பட்டது என்று சொல்லி விட்டு சுவாதி குழந்தையை எடுத்து கொண்டு நடந்தாள்.

gnb மல்டி நேசனல் கம்பெனிக்கு சென்றாள். அங்கு அவள் குழந்தையை வைத்து கொண்டு அழுக்கு உடையிலும் அழுது அழுது வீங்கி போன்ற முகத்திற்கும் அவள் தோற்றத்தை பார்த்த வாச் மென் அவளை உள்ளே விட வில்லை. யாரும்மா நீ எதுக்கு நீ இங்க வர என்று கேட்க அண்ணே நான் இந்த கம்பெனி பாஸ ஒரு 10 நிமஷம் பாத்துட்டு கிளம்பிறேன் என்று சுவாதி சொல்ல சொல்ல அவன் விடமால் கத்தும் சத்தத்தை கேட்டு உள்ளே இருந்து மேனஜர் சிங் வந்து என்னையா இங்க சத்தம் யார் இவங்க என்றார். அதான் சார் நானும் கேக்குறேன் சொல்ல மாட்டிங்கிரங்க ஆனா பாஸ பாக்கணும்னு சொல்லி கிட்டு இருக்காங்க என்றான்.
யார் மேடம் நீங்க உங்களுக்கு என்ன வேணும் எதுக்கு நீங்க பாச பாக்கணும் என்று கேட்க உள்ள போயி பாஸ் கிட்ட சுவாதி வந்து இருக்கேன்னு சொல்லுங்க என்றாள். அப்படி எல்லாம் உடனே பாத்துட முடியாது சார் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கணும் அதுக்கு அப்புறம் தான் பாக்க முடியும் என்றான். சரி நான் வெயிட் பண்றேன் உள்ள போயி கேட்டுட்டு வாங்கலே என்றாள்.

சரி கேக்குறேன் என்று சுவாதியிடம் சொல்லி விட்டு வாட்ச்மேனை தனியாக அழைத்து இவள பாத்தா ஏதோ டொனேசன் கேக்க வந்தவ மாதிரி இருக்கா ஒரு அரை மணி நேரம் இல்ல ஒரு மணி நேரம் பொறுத்து பாத்துட்டு அவளே போயிடுவா என்று மெல்ல அவனிடிம் சொல்லி விட்டு உள்ளே சென்றாள். சுவாதி வெளியேவே ஒரு மணி நேரம் இருந்தாள். குழந்தை அழுதது அவள் பால் பாட்டிலை எடுத்து பால் உட்டினால். இருந்தும் அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அழுக

அவள் ரே ரே செல்ல குட்டி அழுகாதம்மா என்று தோளில் போட்டு தட்டி கொண்டு இருந்தாள். அப்போது அந்நேரம் ஆபிஸின் நடுவே வந்து எல்லாரிடமும் பிரகாஸ் மேனன் ஏதோ சொல்ல அப்போது குழந்தையின் குரல் கேட்க யோவ் என்னையா சத்தம் அது என்றார். யாருன்னே தெரியல சார் குழந்தையோட வந்து இருக்கு ஏதோ டொனேசன் இல்ல பணம் எதுவும் கேட்டு வந்து இருக்கும் போல என்றான்.

இந்த மாதிரி ஆள்கள உடனே அனுப்பி இருக்க வேணாமா என்றார் பிரகாஸ். சாரி சார் ஆனா அந்த பொண்ணு பேர் சொல்லி உங்கள தெரியும்னு சொல்லுச்சு இருந்தாலும் எனக்கு சந்தேகம் அதான் கொஞ்ச நேரம் இருக்க வச்சேன் உங்க கிட்ட அது போனதுக்கு அப்புறம் சொல்லலாம்ன்னு பாத்தேன் என்றான் சிங். என்ன பேர் சொல்லுச்சு என்றார். ஏதோ சுவாதின்னு சொல்லுச்சு என்றான்.

என்ன சொன்ன என்றார். ஏதோ சுவாதியாம் என்று மறுபடியும் சொல்ல பிரகாஸ் ஓங்கி சிங் கன்னத்தில் அறைந்து ஏண்டா அவ இந்த மொத்த சொத்துக்கும் அதிபதிடா அவள போயி பிச்சைக்காரி டொனேசன் வாங்க வந்தவன்னு சொல்ற தள்ளுடா என்று வேகமாக வெளியே ஓடினார் பிரகாஸ்.

அண்ணே ஒரு பத்து நிமிசம்ன்னே அவர் சாய்ங்காலம் வீட்டுக்கு போகும் போது கூட பாத்துக்கிறேன் ப்ளிஸ் என்று சுவாதி வாச் மேனிடிம் கெஞ்ச அதை பார்த்து ஓடி வந்த பிரகாஸ் மேனன் வந்து வாட்ச் மேன் கன்னத்திலும் ஒரு அரை விட்டு வாடா அம்மா சாரிம்மா இவங்களுக்கு எல்லாம் நீ யாருன்னு தெரியாதா அதான் இப்படி பண்ணிட்டாங்கே நீ ம்ம்ன்னு சொல்லு இவங்கள வேலைய விட்டே தூக்கிடுரென்.

சுவாதி ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் உனக்கு கோபம் குறையலன்னு நினைக்கிறேன் நான் வேணா விக்கி கிட்ட வந்து மன்னிப்பு கேக்கவா என்று அவர் சொல்ல சுவாதி முறைத்தாள். சரி உள்ள வாம்மா ஏன் இந்த ஹீட்ல நிக்குற வா உன்னைய நான் எல்லாருக்கும் அறிமுகபடுத்தி வைக்கிறேன் என்றார். இல்ல நான் இங்கயே இருக்கேன் இது வரைக்கும் நான் உங்க கிட்ட எதுவுமே கேட்டது இல்ல இப்ப ஒன்னு கேக்குறேன் செய்விங்களா என்றாள்.

என்ன வேணும்னாலும் கேளுடா இந்த மும்பையவே கூட கேளு என்றார். இந்தாங்க இந்த பேப்பர்ல ஒரு சைன் போடுங்க என்று பேப்பரை கொடுக்க அதை வாங்கி வசித்து பார்த்தார். என்னடா இது இப்படி இருக்கு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமே இல்லன்னு போட்ருக்கு என்றார்.

ஆமா அதே தான் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்ல நான் செத்தா கூட என்னைய பாக்க வர கூடாது அண்ட் அப்கோர்ஸ் என் குழந்தைய நீங்க பாக்க கூடாதுன்னு போடல ஏன்னா என்னையவே பாக்க வராதவாறு எப்படி என் குழந்தைய பாக்க போறீங்க என்றாள். ஐயோ அப்படி எல்லாம் இல்லடா கொடு குழந்தைய பாப்போம் என்றார்.

அவள் குழந்தையை அவர் பார்க்கதாவரு தோளில் போட்டு கொண்டு வேணாம் தயவு செஞ்சு கையலேத்து போட்ருங்க என்றாள். அவர் ஐயோ எல்லாம் என் தப்பு தான் நான் வேணாம் உன் புருஷன் கால்ல விழுகுவா இல்ல வர சொல்லு இதே ஆபிஸ்ல கூட கால்ல விழுந்து அவர நம்ம கம்பெனி மொத்தத்துக்கும் பாஸ் ஆக்குறேன் என்றார். ப்ளிஸ் நான் சொல்றத மட்டும் செய்யுங்க என்றாள். அவர் அப்படியே வருத்தத்தில் நிற்க சரி அத கூட நான் இன்னும் 2 நாள் கழிச்சு வாங்கிக்கிறேன் இப்பதைக்கு உள்ள இருக்க என் புருஷன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து கொடுங்க என்றால்

ஏம்மா நான் அவர நம்ம கம்பெனி பாஸ் ஆக்குறேன் மாப்ள கிட்ட திறமை இருக்குனு நான் அமெரிக்காலே தெரிஞ்சு கிட்டேன் என்றார். ப்ளிஸ் அந்த திங்க்ஸ் மட்டும் கொடுங்க என்று சொல்ல அதை எடுத்து வர சொன்னார். பின்னர் ஆபிஸ் பாய் எடுத்து வந்து கொடுக்க சுவாதி கிளம்பினாள். சரி மணின்னு ஒருத்தர் அன்னைக்கு உங்க கிட்ட சொன்னார்ல என கேட்டாள். ஆமா நான் விசாரிச்சேன் இன்னைக்கு லீவாம் அந்த நாய் அதுனால நாளைக்கு அவன் சீட்ட கிளிச்சுடுறேன். இல்ல என் புருஷன் என் கிட்ட கெஞ்சி கேட்டது அவர் பிரண்டா நீங்க வேலை விட்டு தூக்க கூடாதுன்னு என்றாள்.

சரிம்மா ஏன் அம்மா இந்த டேவிட்ன்னு உனக்கு யாரையுமே தெரியுமா என்று கேட்டார். தெரியாதுன்னு பொய் சொல்ல மாட்டேன் அவர் தான் என்னைய லவ் பண்ணிட்டு நான் அனாதைன்னு தெரிஞ்சு கலட்டி விட்டவாறு ஆனா அதுவும் நல்லது தான் இல்லாட்டி எனக்கு விக்கி கிடைச்சு இருக்க மாட்டான்.

ரெண்டு நாளைக்குள்ள அதுல சைன் போட்டு வைங்க
அண்ட் இன்னொரு முக்கியமான விசயம் என் புருஷன் மேல இனி மேல் சின்ன கீரல் பட்டா கூட நான் நீங்க தான் காரணம்னு போலிஸ் கிட்ட எல்லாம் போக மாட்டேன் அதுக்கு பதிலா நீங்க என்னைய உயிரோட பாக்க முடியாது அதான் உங்களுக்கு கொடுக்குற தண்டனை என்று சொல்லி விட்டு அவள் விறுவிறுவென்று கிளம்ப

பிரகாஸ் மேனன் அப்படியே அந்த தரையில் உக்காந்து அழுதார். அழுது கொண்டே டேய் மணிய முதல லீவா இருந்தாலும் வர சொல்லு என்று சொல்ல மணி அரை மணி நேரத்தில வராட்டி வேலை காலி என்று சொல்ல அவனும் 10 நிமிடத்தில் வந்தான்.

அங்கு வெளியே பிரகாஸ் மேனன் உக்காந்து இருக்க மணி பயந்து கொண்டே உக்காந்து இருந்தான். ம்ம் உன் பிரண்டு டேவிட் போன் நம்பர் கொடுத்துட்டு அப்படியே உன் செல்ல சுவிச் ஆப் பண்ணிட்டு போயி உன் வேலைய பாரு எதாச்சும் நீ எனக்கு முன்னாடி அவனுக்கு போன் பண்ண வேலைய விட்டு எல்லாம் தூக்க மாட்டேன் உன்னயவே தூக்கிடுவென். போடா போயி வேலைய பாரு என்று சொல்ல அவன் உள்ளே குனிந்து கொண்டே போனான். ஹ எதுக்கும் செல்ல கொடுத்துட்டு போ என்று சொல்ல அவனும் செல்லை கொடுத்து விட்டு சென்றான்.

பிறகு போன் அடித்தார். ஹெலோ மிஸ்டர் டேவிட் உங்கள நான் அவசரமா பாக்கணுமே நீங்க என் ஆபிஸ் வரைக்கும் வர முடியுமா என்று சொல்ல அவனும் சுயர் சார் இப்பவே வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

ஆதரவுக்கு நன்றி…????????
தொடர்புக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *