சுவாதி எப்போதும் என் காதலி – 4 Like

என்னது சுவாதி கர்ப்பமா இருக்காளா என்று மீண்டும் அதிர்ச்சியோடு கேட்டான் டேவிட் ,ஐயோ அதையும் இப்ப தான் உலருநேனா ஐயோ மச்சி எதையும் ஞாபகம் வச்சுக்காத மறந்துடு மறந்துடு என்றான் .டேய் எந்திரிடா ஒழுங்கா என்ன நடக்குதுன்னு சொல்லு என்றான் டேவிட் ,ஐயோ எப்படிடா நான் சொல்வேன் எனக்கு நீயும் பிரண்டு அவனும் பிரண்டு நான் எப்படிடா சொல்வேன் என்று போதையில் உளற அவனுக்கு கொஞ்சம் மோர் வாங்கி அவனை குடிக்க வைத்து அவன் போதையை ஓரளவு குறைத்தான் ,

சரி வா வெளிய போவோம் என்று அவனை இழுத்து கொண்டு பாரை விட்டு வெளியே வந்தார்கள் இருவரும் .சரி நடந்தத ஒழுங்கா சொல்லு என்றான் டேவிட் ,இல்ல மச்சான் வேணாம் விட்டுடு உன்னோட லைப்ப பாரு என்றான் மணி ,டேய் இப்ப நீ ஏன் பிரண்டா இருந்த என்ன விக்கிக்கும் சுவாதிக்கும் நடந்ததுன்னு சொல்லு என்றான் டேவிட் ,ஓகேடா சொல்றேன் விக்கி அமேரிக்கா போகும் போது கார என் கிட்ட கொடுத்துட்டு போனான் .நானும் வள்ளியும் அவன் கார அவன் வீட்ல நிப்பட்டாலம்னு போனப்ப அங்க சுவாதி இருந்தா என்று மணி எதுவும் சொல்லமால் நிறுத்தினான் ,

மேல சொல்லுடா என்றான் டேவிட் ,இல்லடா இருக்கட்டும்டா என்றான் மணி .சுவாதி ஒரு வருசமா விக்கி கூட தான் இருக்கா அது மட்டும் இல்லாம என்று மீண்டும் நிறுத்த சொல்லுடா அது மட்டும் இல்லாம என்னடா சொல்றா என்று டேவிட் கேட்க மணி ஏதும் சொல்லமால் இருக்க அவனை பிடித்து மீண்டும் டேவிட் உலுக்கி சொல்றா சொல்லு என்று தொடர்ந்து கேட்க சுவாதி நிறை மாச கர்ப்பிணியா இருக்காடா என்றான் மணி ,அதை கேட்டு டேவிட் அதிர்ச்சியாகி சிறிது நேரம் பேசமால் இருந்தான் .

அவன் அமைதியாக இருப்பதை பார்த்து மச்சி எனக்கு ஒரு டவுட்டு ஒரு வேல அது உன் குழந்தையா இருக்க வாயிப்பு இருக்கா என்றான் மணி ,அவனை கோபத்தோடு பார்த்து விட்டு அப்படி இருந்தா கூட நல்லா தான் இருக்கும் ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல என்றான் டேவிட் ,ஏண்டா என கேட்டான் மணி ,ஏன்னா நான் சுவாதி கூட செக்ஸ் வச்சு 2 வருஷம் ஆகுது அதுனால அது விக்கியோட குழந்தைய தான் இருக்கணும் இன்பெக்ட் அது யார் குழந்தைய இருந்தா எனக்கு என்ன எனக்குன்னு இப்ப ஒரு பொண்டாட்டி குடும்பம்னு ஆயிடுச்சு அப்புறம் ஏன் ஏவ எவன் கூட இருந்தா எனக்கு என்ன என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் கண்களில் இருந்து கண்ணிற் வந்தது .
ஐயோ என்ன இது இவன் இப்படி பீல் ஆகுறான் இதுக்குதான் சரக்கே அடிச்சுருக்க கூடாது தேவை இல்லாம இப்ப இவன் இப்படி பீல் பண்றானே என்று மணி நினைத்தான் ,மச்சி விட்டுடா அத நீ தான் அவள பிரேக் ஆப் பண்ணி 3 வருஷம் ஆச்சுல என்றான் 3 இல்ல ரெண்டரை வருஷம் என்றான் டேவிட் அழுது கொண்டே .சரி போகுது விடு இனி மேல் அவ எப்படி ஆனா நீ ஏண்டா வருத்த படுற என்றான் மணி ,நீ சொல்றது காரெக்ட் தான் ஆனா என்னால என் பீலிங்க்ஸ கண்ட்ரோல் பண்ண முடியலடா என்று சொல்லி அழுதான் ,

சரி சரி எல்லாம் சரி ஆகும் நீ எல்லாத்தையும் மறந்துட்டு உன் வோயிப் கூட இருக்க பாரு என்று அவனை சமாதன படுத்தினான் .ஓகேடா நான் நீ சொன்ன மாதிரியே எல்லாத்தையும் மறந்து வாழ பாக்குறேன் என்றான் டேவிட் .பின் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றார்கள் ,மணி இரவு 12 ஆயிற்று .மணி அவன் வீட்டுக்கு போனான் .வள்ளி தூக்க கலக்கத்தில் ஏன் இவளவு நேரம் என கேட்டாள் ,அது சும்மா விக் எண்டுநாலா ஒரு சுமால் கட்டிங் அடிச்சு இருக்கேன் அவளவு தான் என்றான் மணி ,இல்லையே உங்கள பாத்தா சுமால் கட்டிங் அடிச்சு இருக்க மாதிரி தெரியலையே ஒரு முழு பாட்டிலேயே அடிச்ச மாதிரில இருக்கு என்றாள் வள்ளி ,

யே இல்லடி சுமால் கட்டிங் தான் அடிச்சு இருக்கேன் என்றான் மணி ,இல்ல எனக்கு நல்லா தெரியுது நீங்க நிறைய குடிச்சு இருக்கிங்கன்னு ஓகே இப்ப அது பிரச்சினை இல்ல நீங்க யார் கூட உக்காந்து குடிச்சிங்க என கேட்டாள் வள்ளி ,இது என்னடி கேள்வி நம்ம டேவிட் கூட தான் என்றான் மணி ,அதை கேட்டு வள்ளி தலையில் கை வைத்து போச்சுடா என்றாள் ,ஏன் என்ன ஆச்சு என்றான் மணி ,நீங்க விக்கி சுவாதி விசயம் எல்லாம் அவன் கிட்ட உலரிட்டிங்க தான என கேட்டாள் வள்ளி ,யே இல்லடி இல்ல இல்லவே இல்ல என்றான் மணி ,

நீங்க இத்தன இல்ல போடும் போதே தெரியுது நீங்க உலரிட்டிங்கன்னு என்றாள் ,

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *