சுவாதி எப்போதும் என் காதலி – 7 Like

.சுவாதி இந்த பையல போயி அடிச்சா தான் வழிக்கு வருவான் என்னைய விடு இந்தா குழந்தைய பிடி என்று வள்ளி வேக வேகமாக போக சரியாக அந்நேரம் மணி அவனை குண்டு கட்டாக தூக்கி கொண்டு காரில் எத்தினான் .வள்ளி வெளியே போயி அப்படியே போயிடுங்க ரெண்டு பேருமே வந்துடாதிங்க என்று கத்தினாள் ,அங்கவே நின்னு கொண்டு இருந்தால் வள்ளி அரக்கி ஆகிடுவான்னு புரிஞ்சு கிட்டு மணி வேகமாக காரை எடுத்தான் ,

சுவாதி வள்ளியை கட்டி பிடித்து அழுதாள் .நீ ஒன்னும் கவலை படாதம்மா என் கண்ணு இந்த ஆம்பிள நாய்களே இப்படி தான் நீ அதுக பேசுறது எல்லாம் நாய் குரைக்கிற மாதிரி நினைச்சுக்கோ எல்லாம் சரி ஆகிடும் என்றாள் வள்ளி ,அப்புறம் உன் கூட இருந்த உன் பிரண்ட் எங்க என கேட்டாள் வள்ளி ,அவங்க இன்னைக்கு இங்க அவங்க ஹாச்பண்ட் வந்துருக்காங்கன்னு சீக்கிரமாவே போயிட்டாங்க அதான் நான் உனக்கு போன் அடிச்சேன் என்றாள் சுவாதி .

அந்த நேரத்துல தான் இந்த நாய் உள்ள நுழைந்சுடுச்சா சரி நீ அத மறந்துடு என்ன சொல்றார் என் மருமகன் என்று சுவாதியிடம் வள்ளி சிரித்து கொண்டே கேட்க சுவாதியும் கண்களை துடைத்து கொண்டு மெல்ல சிரித்தாவரே கேட்டாள் .அது எப்படிடி இன்னும் பிறக்கிறதுக்கு முன்னாலே அது என்ன குழந்தைன்னு சொல்லி சொந்தம் வேற கொண்டாடுற என கேட்டாள் சுவாதி .எனக்கு மத்தவங்க பாக்குற மாதிரி பாத்த ஒரு பொண்ணு முகத்த உடனே என்ன குழந்தைன்னு சொல்ல தெரியாது பட் விக்கி என் கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்கான் என்றாள் .

ஐயோ இவ எதுக்கு இப்ப விக்கிய இழுக்குறா என்று நினைத்து கொண்டு ஓகே என்ன ப்ராமிஸ் பண்ணான் என்றாள் சுவாதி .அதாவது அவன் எப்ப கல்யாண பேச்சு எடுத்தாலும் முடியாதுன்னு சொல்வான் ஆனா நான் ஒரு தடவ அதாவது கர்ப்பமான பிறகு சொன்னேன் நம்ம கண்டிப்பா வருங்காலத்துல சம்பந்தி ஆகணும்னு சொன்னேன் என்றாள் வள்ளி ,சரி அதுக்கு அவன் என்ன சொன்னான் என்றாள் சுவாதி .முதல அப்படி இப்ப்டின்னான் அப்புறம் நான் செண்டிமேண்டா பேசவும் ஓகே சொல்லிட்டான் ஆனா என்ன அதுல கொஞ்சம் சேன்ஜ் ஆகிடுச்சு இப்ப என்றாள் வள்ளி ,
ஏன் என்ன ஆச்சு என்றாள் சுவாதி .என்ன எனக்கு பையன் பிறக்கும் அவனுக்கு பொண்ணு பிறக்கும்னு சொன்னேன் இப்ப லிட்டில் சேன்ஜ் எனக்கு பொண்ணு உங்களுக்கு பையன் பரவல பட் நீ மாமியாரா இருந்து என் பொண்ண கொடுமை படுத்த கூடாது என்று சொல்லி வள்ளி சிரிக்க சுவாதியும் சிரித்தாள் .என்னடி ஓகே தானே விக்கிக்கு ஓகே உனக்கு என்றாள் வள்ளி ,சுவாதி சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனாள் .நான் ஒருத்தி இப்ப என்னமோ இதுகளுக்கு 25 வயசு ஆன மாதிரி சம்பந்தம் பேசி கிட்டு இருக்கேன் ,சரி அத விடு விக்கிக்கும் உனக்கும் இடையில உண்மைல ரிலசென் எப்படி இருக்கு

ரெண்டு பேரும் ஒண்ணா சந்தோசமா இருக்கிங்களா future பிளான் எல்லாம் என்ன என்று வள்ளி கேட்க சுவாதி அதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தாள் .சொல்லுடி இப்ப தான் அந்த அக்கா இல்ல மணி இல்ல யாருமே இல்ல நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் பழைய மாதிரி நம்ம ரகசியங்கள பகிர்ந்துகிருவோம் என்றாள் வள்ளி ,ஒ பழைய மாதிரி நம்ம ரெண்டு பேரும் என்று சுவாதி ஆரம்பிக்கும் முன்னே ஒ ஒ ஒ மேடம் நிப்பாட்டுங்க ஏன் என்னைய இத்தன நாளா பாக்க வரல அப்படி இப்படின்னு அன்னைக்கு மாதிரி பேச்சை மாத்துநிங்க அவளவு தான் நான் மனுசியா இருக்க மாட்டேன் என்றாள் வள்ளி .

புத்திசாலி காறேக்ட்டா புரிஞ்சு கிட்டா என நினைத்து கொண்டு சிறிது நேரம் யோசித்து விட்டு உண்மைய சொல்லனும்னா எனக்கு விக்கி மேல எந்த பீலிங்க்ச்ம் இல்ல என்றாள் சுவாதி ,அது எப்படிடி ரெண்டு பேரும் ஒண்ணா செக்ஸ் வச்சு கிட்டிங்க ஒரே வீட்டுல 8 மாசமா இருக்கீங்க அப்புறம் எப்படி ரெண்டு பேருக்குள்ளேயும் ஒன்னும் இல்லன்னு சொல்றிங்க என்ன நீங்க அமெரிக்கால இருக்கிங்களா இல்ல எல்லாத்துக்கும் மேல உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை வேற பிறக்க போகுது என்ன விலையாடுரிங்கலா என்றாள் வள்ளி ,

வள்ளி இப்ப தான் ஒரு ஆள் வெளிய நின்னு தொல்லை பண்ணிட்டு போனான் ,நீ உள்ள இருந்து தொல்லை பண்றியா என்றாள் சுவாதி .நான் ஒன்னும் உன்ன தொல்லை பன்னல உன் லைப்க்குஆக கேக்குறேன் என்றாள் வள்ளி ,ஏன் லைப் பத்தி என்று மறுபடியும் ஆரம்பிக்கக் யே நிறுத்துடி சும்மா இந்த மாதிரி பேசி ஒன்னும் என்னைய அசிங்க படுத்தி வெளியேத்த நினைக்காதே நீ காரி துப்பி செருப்பால அடிச்சா கூட பதில் தெரியாம போக மாட்டேன் ,உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இந்நேரம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருந்தா அவன் வந்து கத்துவானா சொல்லு

வெல் நான் உண்மைய தான் சொல்றேன் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒண்ணுமே இல்ல என்றாள் சுவாதி ,ஒண்ணுமே இல்லாட்டியும் பரவல உங்களுக்கு பிறக்க போற குழந்தைக்காகவாசும் மாற வேணாமா என்றாள் வள்ளி ,சரி இந்த இடத்துல ஒரு உண்மைய சொல்றேன் இந்த குழந்த விக்கி குழந்தை இல்ல

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *