முள் குத்திய ரோஜா – 2 Like

காபி முடிந்திருந்தது. ஆனால் அவளுடன் இன்னும் நிறைய பேச வேண்டும் போல என் மனம் ஒரு தவிப்பை அடைந்திருந்தது.

” சித்ராவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க நிலா..”

” ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..”

” ம்ம்.. சொல்லுங்க. ?”

” இந்த.. ‘ங்க’ வேண்டாம். கால் மீ நிலா. நான் உங்களை விட.. மூணு வருசம் பக்கம் சின்னவ.. !!”

” ஓககே.. ”

” தேங்க்ஸ்.. ”

” சரி.. நீ எங்க இருக்க இப்ப.. ?”

” பாட்டி வீட்ல.. ” அவள் புன்னகை விரிந்தது. ”நானும் பாட்டியும் மட்டும்.. ”

” ஏன்.. அப்பா அம்மா.. ??”

” ம்ம். இருக்காங்க. ! அக்கா வீட்டு பக்கத்துலயே.. ! நான் மட்டும் இங்க பாட்டிக்கு துணையா.. இருக்கேன்.. !!”

” ஜாபுக்கு ஏதாவது போறியா என்ன.. ?”

” ம்ம்.. போறேன்.! ஒரு கார்மெண்டாஸ்க்கு. இப்ப.. நான் டூட்டி முடிஞ்சுதான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். வந்த எடத்துல சர்ப்ரைசிங்கா.. உங்களை பாத்துட்டேன்.. !!”

” எனக்கும் உன்ன பாத்தது சந்தோசம்தான். ! சரி உன் வீடு எங்க இருக்கு இப்ப.. ?”

அவள் ஏரியாவைச் சொன்னாள். அவளது போன் நெம்பரைக் கொடுத்து என் நெம்பரை வாங்கிக் கொண்டாள். அப்பறம் நேரம் ஆவதை உணர்ந்து எழுந்து வெளியே வந்து கை குலுக்கி கிளம்பியபோது.. என் மனது எங்கோ மிதப்பதைப் போலிருந்தது.. !!

இவளது அக்கா.. சின்ன வயசு சித்ரா.. என் மனம் முழுவதும் வியாபித்திருந்தாள். அந்த வயதில் அவள்தான் என் இதய தேவதை..! அப்போது எவ்வளவு அழகாக இருந்தாள் அவள்.. !! ஹூம்.. வெளியே சொல்லாமல்.. எனக்குள்ளேயே புதைந்து போன காதல் அது.. !! ஆனால்.. ஆனால்.. நிலாவினி என்ன சொன்னாள். ? நாங்கள் காதலித்ததாக… அல்லவா சொன்னாள்.. ?? மை காட்…! எப்படி..? அதை நான் என் நண்பர்களிடம் கூட சொன்னதில்லையே.. ?? சித்ராவும் என்னை விரும்பியதாக அல்லவா நிலாவினி சொன்னாள். ?? அப்படியானால்… அப்படியானால்…..
‘அட.. ச்ச.. ! நான் விரும்பியதை எப்படியோ தெரிந்து கொண்டு அவளும் என்னை விரும்பியிருக்கிறாள்.. !! இந்த விசயம் தெரியாமல் நான் பல நாள் தூங்காமல் தவித்தேனே.. ? ஒருவேளை அவளிடம் நான் வந்து காதலைச் சொல்வேன் என்று எதிர் பார்த்துக் காத்திருந்தாளோ…?? சொல்லியிருந்தாள்.. அவள் எனக்கு கிடைத்திருப்பாளோ.. ? இப்போதும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.. ?? தன் காதலை தங்கையிடம் சொன்னவள்.. என்னிடம் சொல்லியிருக்க கூடாதா.. ? ஜாடை மாடையாகவாவது.. ??’

எனது எண்ணச் சிந்தனைகளில் உழன்றபடி நான் எனது வீட்டை அடைந்தேன். வழக்கம் போல என் மனைவியின் புலம்பல்கள் நச்சரிப்புகள்.. அலட்சிய பேச்சுக்களில்.. எல்லாம் பாதிக்கப் பட்ட என் மனசு.. சித்ராவை நினைத்து.. தனது சுகத்தை தேடிக் கொண்டது.. !!

இரவு வாட்ஸ் அப் ஓபன் பண்ணியபோது நிலாவினி நெம்பரில் இருந்து அழகான ஒரு குழந்தை படத்துடன் குட்நைட் மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்த உடனே நான் அவளுக்கு ஒரு குட்நைட் அனுப்பி வைத்தேன்.. !! அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே குட்மார்னிங் அனுப்பியிருந்தாள். நான் ஆறரை மணிக்கு எழுந்து அவளுக்கு குட்மார்னிங் அனுப்பினேன். இது எல்லாம் நான் என் மனைவிக்கு தெரிந்து அனுப்ப முடியாது. தெரியாமல்தான் அனுப்பி வைத்தேன்.. !!

அவளது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில்.. ஒரு குழந்தை படத்தை வைத்திருந்தாள். சின்ன குழந்தை அழகாய் இருந்தது. அதை யாரெனக் கேட்டேன். அவள் எட்டரை மணிக்கு அதற்கு பதில் சொல்லியிருந்தாள்.!

‘சித்ரா பொண்ணு..! ரெண்டு வயசு அப்போ.. !’

நான் டீ டைமில் அதைப் பார்த்து விட்டு அவளுக்கு ரிப்ளே செய்தேன்.
‘ரொம்ப அழகா இருக்கு ‘

மதியம் லஞ்ச் பிரேக்கில் அவள் எனக்கு பதில் அனுப்பியிருந்தாள்.
‘தேங்க்ஸ்..!’டிபி மாத்தியிருந்தாள். இப்போது பையன். ‘அவ பையன் ‘ என்று அவளே சொல்லியிருந்தாள்.

‘ ரெண்டு குழந்தைகளும் லட்டு மாதிரி இருக்கு.’ நான் அனுப்ப.. உடனே ரிப்ளே வந்தது.

‘ தேங்க்ஸ்.. ! உங்க குழந்தைங்கள நான் பாக்கலாமா..? வித்.. அவங்ம்மாவோட.. ?’ ஸ்மைலி. !

நான் எனது குடும்ப போட்டோவை அனுப்பினேன்.

‘ரொம்ப அழகா இருக்கு. ஐ லவ் யூ ஆல்..!’ என்று அனுப்பினாள்.

‘ தேங்க்ஸ்.. !’

‘ வாட் யூ டூ ?’ சுருக்கமாக கேட்டாள்.

‘ லஞ்ச்.! நீ ?’

‘ ம்ம். சாப்பிட்டாச்சு. ! நைட் மெசேஜ் பண்றேன். பை !’ என்று அவசரமாக முடித்திருந்தாள்.

‘ ஓகே பை ‘ சொல்லி விட்டு நானும் எனது அலுவலை கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் மனசெல்லாம் சுகமான நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தது …… !!!!!

– சொல்லுவேன் …… !!!!!!

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *