வசந்த காலம் – 13 Like

தெரியாது டி மறந்துட்டேன் என்றேன் என் நெற்றியை தடவி இந்த தழும்பு ஏன் வந்துச்சுன்னு தெரியுமா என்றால் ம்ம் யார்கூடவோ சண்டை போற்றுக்கேன் அவன் கல்லால அடிச்சிட்டான் என்றேன். ஆமாம் எதுக்காக சண்டை போட்ட ஞாபகம் இருக்கா டா இல்லடி என்றேன் எனக்காக தான் போட்ட டா என்றாள். அப்படியா என்ன ஆச்சு என்றேன் சின்ன வயசுல நம்ம பாட்டி வீட்ல விளையாடும் போது பக்கத்து வீட்டு பையன் நான் அழகா இல்லன்னு கிண்டல் பண்ணினான் என்றாள் நீயா என்னடி சொல்ற அழகாத்தானே இருக்க என்றேன் இல்லை டா அப்போலாம் அசிங்கமாத்தான் இருப்பேன் எதுகெடுத்தாலும் அழுத்துகிட்டு மூக்கு வடிச்சிக்கிட்டு தான் இருப்பேன் நம்ம விளையாடும் போது நான் கீழ விழுந்து அழுதேன் அதுக்கு தான் அவன் கிண்டல் பண்ணினான் அப்போ தான் நீ அவன் கூட சண்டைக்கு போன ஏன்டா என் ஆளையே கிண்டல் பன்றியானு கேட்டு அவனை அடிச்ச அவனும் பதிலுக்கு கல்ல எடுத்து அடிச்சான் ஆனாலும் நீ விடல அவனை நல்ல போர்த்தி எடுத்துட்ட மறு நாள் அவங்க அம்மா வந்து வீட்லயே சண்டை போட்டாங்க

அப்பவும் நீ சொன்ன அவன் என் அம்முவ கிண்டல் பண்ணினான் அதான் அடிச்சேன்னு நீ எதனால அப்படி சொன்னனு எனக்கு தெரியாது டா ஆனா அந்த நிமிஷமே நீ தான் எனக்கு எல்லாம்னு முடிவு பண்ணிட்டேன் பாரு உனக்கு புடிக்கும்னு தான் இப்போ கூட மஞ்சள் சுடிதார் போட்டுக்கிட்டு வந்தேன் பாரு நல்லா இருக்கா என்றாள். அடி பாவி எனக்கு புடிச்ச கலர் லாம் ஞாபகம் வச்சுருக்கியா இன்னும் என்றேன் ஆமாம் கண்ணா உனக்கு எது புடிக்கும் எது புடிக்காது நீ என்ன பண்ணுவ எல்லாம் ஞாபகம் இருக்கு எப்பவும் இருக்கும் என்றாள். ஹாஹா அடியே அவனவன் நேத்து நடந்ததையே மறந்துடறான் நேத்து புடிச்சது இன்னைக்கு புடிக்க மாட்டிக்கிது நான் 12 வருஷம் மாராம இருப்பேன்னு எப்படி நெனச்ச என்றேன். டேய் நீ தான் என்ன மறந்துட்ட எனக்கு எப்பவுமே உன் நினைப்பு தான் பாரு எப்பவும் உன் போட்டோ என் பர்ஸுளையும் போன்லயும் இருக்கும் என்று என் சிறு வயது போட்டோவை காட்டினாள் அதில் கூட ஒரு பெண் குழந்தையும் இருந்தது அவள் கூறியது போல சற்று சோர்வான முகம் அவளுடன் ஒத்திருந்தது அதை ஏற்கனவே பாட்டி வீட்டிலும் பார்திருப்பதால் அவள் தான் என உறுதி செய்து கொண்டு அப்பவும் அழகாதானே டி இருக்க உனக்கு என்ன குறைச்சல் இப்படி பட்ட பெண்ணுக்காக நான் சண்டை போட மாட்டேனா என்று கூறினேன்.
ஹாஹா கண்ணா நான் எப்படி இருந்தா உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும் நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் அதனால அப்பவே உனக்கு புடிச்ச மாதிரி என்னை நான் மாதிக்கிட்டேன் என்றாள். என்னகாவா இவ்வளவும் செஞ்ச ஏண்டி என்றேன் ஏன்னா நான் உன்னை அவ்வளவு காதலிக்கிறேன் டா 12 வருஷமா உண்ண தவிர நான் யாரையுமே நினைகல நான் வழந்ததே உனக்காக தான் டா என் அத்தான் என்று மீண்டும் இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தாள் இம்முறை அவளிடம் வெறி தெரிந்தது எனக்கோ இம்முறை காதல் தோன்றி இருந்தது மென்மையை கையாண்டேன். நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த சிறு உதவிக்காக தன் முழு வாழ்க்கையையும் ஒப்படைக்க தயாராக தேவதை போல ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்தாள் யாருக்கு தான் காதல் வராது என்று நினைத்துக்கொண்டு அவள் முத்தத்திற்கு ஒத்துழைத்தேன் அவள் என்னை விடுவித்து என்னடா கண்ணா பேசி பேசி மூட் அவுட் ஆக்கிடனா முன்ன இருந்த வெறியை காணும் என்றாள். இல்லடி அம்முகுட்டி வெறி காதலா மாறிடிச்சு அவசரம்

இல்ல இனி நீ முழுசா எனக்கு தான்னு தெரிஞ்சப்பரம் எதுக்கு டி அவசரம் என்றேன். பாருடா என் கண்ணனுக்கு என் மேல் காதலாம் 12 வருடம் லேட்டா வந்துருக்குடா உன் காதல் நீ ரொம்ப ஸ்லோ என்றால் எனக்காக ஒரு முறைப்பொன்னு தேவதை மாதிரி என்னமட்டுமே நெனச்சி காத்துகிட்டு இருக்குறான்னு தெரிஞ்சா யாருக்கு தான் லவ் வராது என்றேன் அய்யோ என் கண்ணா ஐ லவ் யூ டா என்று கூறி மீண்டும் முத்தம் பதித்தாள் அவளை விடுவித்து நானும் தாண்டி அம்முக்குட்டி என்று அவளை இழுத்து இதழை கடித்தேன் ஆஹ் பொறுமையா பன்னு டா கண்ணா இப்போ தானே சொன்ன நான் உனக்கு சொந்தம் பொறுமையா பண்ணிக்கலாம்னு அதுக்குள்ள ஏன் அவசரம் என்றாள் ஹாஹா இல்லை டி இப்படி

குத்தும் குலையுமா இருந்தா யாருக்கு தான் மூடு வராது என்றேன் அட பாவி மூடு வந்துடுச்சா விட்டா இங்கேயே குடும்பம் நடத்திடுவ போல திருட்டு பையா என்றாள். அதெல்லாம் மாட்டேன் என ஆள நான் மட்டும் தான் பாப்பேன் இப்படி போதுவுல லாம் ம்கூம் என்றேன் அவள் ச்சி போடா திருடா என்றாள். என்னடி திருடன்னே சொல்லிக்கிட்டு இருக்க என்றேன் ஆமாம் என் மனசை திருடிட்டல்ல அதான் அப்படி சொல்றேன் உன் மனசை கொடுக்குறதுக்கு 12 வருஷம் ஆக்கிட்ட திருடா என்றாள் ஹாஹா சரி குடுத்துட்டேன்ல பத்திரமா வச்சிக்கோ என்றேன் இதுக்கு தானே டா வெய்ட் பண்ணினேன் _ தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *