கண்ணாமூச்சி ரே ரே – 2 Like

Tamil Kamakathikal – கண்ணாமூச்சி ரே ரே – 2

View all stories in series

Tamil Kamakathaikal – வார்த்தைகளில் வெளிப்படாத ஒருவகை அர்த்தம்.. குறிஞ்சியின் அந்த கூர்மையான பார்வையில் வெளிப்பட்டது..!! தீர்த்தபதியாலும் அந்த அர்த்தத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.. அவனையும் அறியாமல் அவனது தலை கவிழ்ந்துகொண்டது.. இப்போது சற்றே கம்மலான குரலில் சொன்னான்..!!

22

“மன்னிச்சுடு குறிஞ்சி.. இப்படி ஆகும்னு நான் எதிர்பாக்கல..!!”

“ப்ச்.. தப்பு பண்ணிட்டிங்க.. பெரிய தப்பு பண்ணிட்டிங்க..!!”

சலிப்பாக சொன்ன குறிஞ்சி, அந்த தகரப்பெட்டியில் தொடர்ந்து எதையோ தேடினாள்.. பிறகு மரத்தாலான அந்த சிறிய பெட்டியை உள்ளிருந்து வெளியே எடுத்தாள்.. சிறுக சிறுக சேர்த்த சில நகைகள் அடங்கிய பெட்டி..!! பச்சை நிறத்தாலான ஒரு துணியை கட்டிலில் விரித்து, அதன் மையமாக அந்த பெட்டியை வைத்தாள்.. கூரையில் தொங்கிய பானைக்குள் கைவிட்டு பணமுடிப்பை வெளியே எடுத்தாள்.. கொடியில் தொங்கிய சில உடைகளை அள்ளிக்கொண்டாள்..!! அவ்வளவையும் அந்த பச்சைத்துணியால் சுற்றி சிறு மூட்டையாக்கினாள்.. முதுகுக்கு குறுக்காக அந்த மூட்டையை அணிந்துகொண்டாள்..!!

“இந்தா.. இதையும் வச்சுக்கோ..!!”

அணிந்திருந்த பொன் நகைகளை கழற்றியிருந்த தீர்த்தபதி.. அவற்றை உள்ளங்கையில் வைத்து குறிஞ்சியிடம் நீட்டினான்..!! அவனை கூர்மையாக ஏறிட்ட குறிஞ்சி.. தலையை மெலிதாக அசைத்து ‘வேண்டாம்’ என்று மறுத்தாள்..!! அவன் மீதிருந்த பார்வையை விலக்காமலே.. அலமாரியில் இருந்து அந்த குறுவாளை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்..!! ‘உன்னால் எனக்கு எத்தனை இடர்பாடுகள் பார்..’ என்பது மாதிரி இருந்தது அவள் தீர்த்தபதியை பார்த்த பார்வை..!!

“நேரம் ஆயிட்டு இருக்கு குறிஞ்சி.. எந்த நேரமும் அவங்க இங்க வரலாம்.. நீ சீக்கிரம் புறப்படு..!!”

தீர்த்தபதி சொல்ல, குறிஞ்சி நீளமாக ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்தினாள்.. சாளரத்தின் வெளியே சடசடத்த மழையை ஒருமுறை திரும்பி பார்த்தாள்.. கட்டிலில் கிடந்த அந்த சிவப்பு நிற அங்கியை கையில் எடுத்தாள்.. தனது உடலை முழுதும் போர்த்தும்படியாக தலையை சுற்றி அணிந்து கொண்டாள்.. கழுத்துப் பகுதியில் இருபுறமும் தொங்கிய நாடாக்களை சரக்கென இழுத்து முடிச்சிட்டாள்.. அவசரமாய் வாசலை நோக்கி நடந்தாள்..!!

தீர்த்தபதி பின்தொடர வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்..!! கும்மிருட்டு.. ஜிவ்வென்று கொட்டுகிற மழை.. மின்னல் வெளிச்சத்துடன் இடிமுழக்கம்.. ஏதோ ஒரு காட்டு விலங்கின் தூரத்து ஓலம்..!! மழையில் நனைந்து நடந்த குறிஞ்சி.. தலைகுனிந்து தயாராய் நின்றிருந்த அந்த குதிரையை நெருங்கினாள்.. அதன் முதுகில் கைபதித்து லாவகமாக மேலேறினாள்..!!

“பார்த்து கவனமா போ குறிஞ்சி..!!”

கனிவுடன் சொன்ன தீர்த்தபதியை ஒருகணம் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு.. குதிரையின் கடிவாளத்தை பிடித்து சரக்கென இழுத்தவள்.. ‘ஓவ்’ என்று சப்தமெழுப்பியவாறு கால்களை விரித்து குதிரையின் விலாப்பகுதியை உதைக்க.. அது உடனடி வேகமெடுத்து ‘விர்ர்ர்ர்ர்’ என்று கிளம்பியது..!! மழை நீரின் அடர்த்தியையும் மீறி, எதிர்க்காற்றின் அசுர வேகத்தில்.. அவள் அணிந்திருந்த சிவப்பு அங்கி உயரெழும்பி பறந்தது..!! ‘தடக்.. தடக்..’ என குளம்படி ஓசையுடன் பறந்து செல்கிற குதிரையை.. பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் தீர்த்தபதி..!!

குறிஞ்சியின் குதிரை அந்த இடத்தை விட்டு கிளம்பிய சில நொடிகளிலேயே.. வேறு திசையில் இருந்து அதே ‘தடக்.. தடக்..’ ஓசையுடன் நான்கு குதிரைகள் வந்தன.. கடிவாளம் இழுக்கப்பட்டு குறிஞ்சியின் வீட்டின் முன்பாக வந்து நின்றன..!! குறிஞ்சியை இழுத்து செல்ல இத்தனை சீக்கிரம் வருவார்கள் என்று தீர்த்தபதி சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. குழம்பிப் போனான்..!! கையிலிருந்த நகைகளை உடனே பின்புறமாக மறைத்தவன்..

“அ..அவளை இழுத்து செல்லத்தான் நானும் வந்தேன்.. அதற்குள்ள விஷயம் தெரிஞ்சு அவ தப்பிச்சுட்டா..!!”

என்று தடுமாற்றமாக சொன்னான்..!! தொடர்ந்து.. அவள் சென்ற திசையென தவறான திசையை காட்ட எண்ணி அவன் கையை உயர்த்துகையிலேயே..

“அதோ.. அங்க போறா பாரு..!!”

குதிரையில் வந்தவர்களில் ஒருவன்.. குறிஞ்சி சென்ற திசையை சரியாக கண்டறிந்து கொண்டான்..!! சற்றும் தாமதியாமல்.. நால்வரும் அதே திசையில் தங்கள் குதிரைகளை முடுக்கி விரைந்தனர்..!! ‘குறிஞ்சி இந்த ஊரை விட்டு சென்றால் போதும்’ என்று எண்ணியிருந்த தீர்த்தபதியின் நெஞ்சில் இப்போது ஒருவித கலக்கம்.. குற்ற உணர்வு ஒன்று அவனுடைய மனதில் மெலிதாக பரவ ஆரம்பித்தது..!!

23

கடும் மழை பொழிகிற மலைப்பிரதேசம்.. கரி பூசிவிட்ட மாதிரியாக அடர்இருள்.. நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காட்டுமரங்கள்.. அதற்குள்ளே வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலை..!! அந்த சாலையில்.. சிவப்பு நிற அங்கி காற்றில் படபடக்க.. வெள்ளை நிற குதிரையில் குறிஞ்சி பறந்து கொண்டிருந்தாள்..!! சிறிது தூர இடைவெளியில்.. இன்னும் நான்கு குதிரைகளில்.. புவனகிரியின் ஆட்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்..!!

குறிஞ்சி குதிரையேற்றம் அறிந்தவள் என்றாலும், கைதேர்ந்தவள் என்று சொல்ல முடியாது..!! பின்தொடர்ந்து சென்றவர்களுக்கோ அது அன்றாட பணியும் பயிற்சியுமாக இருந்தது..!! குறிஞ்சிக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துகொண்டே வந்தது..!!

குதிரையை விரட்டிக்கொண்டே.. குறிஞ்சி தலையை மெல்ல திருப்பி பின்னால் பார்த்தாள்..!! துரத்துபவர்கள் இப்போது தனக்கு இன்னும் நெருக்கமாக வந்திருப்பதை அறிந்ததும்.. அவளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது..!! மாட்டிக்கொள்வோமோ என்பது மாதிரியான ஒரு பயம்.. அவளுடைய மனதினை வந்து கவ்விக்கொண்டது..!! குதிரையின் வயிற்றை உதைத்து.. அதனை வேகம்கொள்ள தூண்டினாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *