கனா கண்டேனடா – 3 Like

Tamil Kamakathikal – கனா கண்டேனடா – 3

View all stories in series

Tamil Kamakathaikal – ஒன்பது மணிக்கு tata sumo வில் எங்கள் பயணம் தொடர்ந்தது.
முன்னிருக்கையில் அப்பா, நடுவில் நாங்கள், பின்னிருக்கைகளில் அம்மாவும், பாட்டியும்.
வழிநேடுகவே அம்மாவும் பாட்டியும் அவரிடம் கேள்வி கேட்டும் காமெடி என்ற பெயரில் ஏதோ சொல்லி சிரித்தும் என்னை பேசவிடாமல் பண்ணி விட்டனர்.

ஒரு மணி நேரத்தில் கோவில் வந்தடைந்தது. கோவில் ஒரு மலை மேல் இருந்தது. அப்பா கோவில் குருக்களை பார்க்க வேண்டும் என்று கடகடவென்று ஏறி விட்டார். நானும், என்னவரும், பாட்டியும், அம்மாவும் மெல்ல ஏற ஆரம்பித்தோம். அவருடன் பேச ஆசையாக இருந்ததால் அவர்களை முன்னே ஏற விட்டு, நான் மெல்ல பின்வாங்கினேன். அந்த மரமண்டைக்கு புரிந்ததாக தெரியவில்லை. என்னவென்றே தெரியாமல் முழித்தான்.

அம்மாவும், பாட்டியும், “என்ன காவ்யா” என்று கேட்க, “கஷ்டமா இருக்குமா” என்று இவரை பார்த்துக்கொண்டே சொன்னேன். இப்போது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
“நான் கூட்டிட்டு வரட்டுமா அத்தை” என்று அவர் என் அம்மாவிடம் கேட்க. “சரி தம்பி, நீங்க பொறுமையா வாங்க” என்று சொல்லிவிட்டு மெல்ல மேல்நோக்கி நடந்தனர்.

நான் ஏற கஷ்டபடுவதை போல பாவ்லா காட்டி, பாசமாக அவனை பார்க்க. தன் கைகளை அவன் நீட்டினான். சின்ன தயக்கத்தோடு அவன் கைகளை பிடிக்க, என்னை கை பிடித்து அழைத்து சென்றான்.
இனி காதல் ஆரம்பம்…

நான் மெல்ல ஆரம்பித்தேன்… “நீங்க இந்த மாதிரி மலை எல்லாம் ஏறி இருக்கீங்களா?”
“ஹ்ம்ம்.. நாங்க friends சேந்து அடிக்கடி ட்ரெக்கிங் போவோம், பட் அது காட்டுக்குள்ள போவோம்.”
“ஓஹோ.. அப்போ அது தான் உங்க fitness ரகசியமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க..
“ஓஹ்.. அப்போ பிட் ஆ இருக்கேனா?” மெல்லிய புன்னகையோடு என் கண்களை பார்த்துக்கொண்டே கேட்க.. நான் திரும்பவும் clean bowled..

படிகளை பார்த்துக்கொண்டு வெட்கத்தில் சிரித்துக்கொண்டே நடந்த என்னிடம், அடுத்த கேள்வி கேட்டார்..
“என்னை பிடிச்சிருக்கா?”
ஒரு கணம் நின்று ஓரக்கண்ணால் பார்த்தேன்.. என் முகத்தையே கூர்மையாக பார்த்தான்..
“ஹ்ம்ம்..” தலைகுனிந்தே தலையாட்டினேன்.

ஒரு நிமிட மௌனம்.. படிகளை பார்த்தே நடந்தோம் இருவரும்.. நான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று அவனுக்கு நான் சொல்லாமலேயே புரிய வேண்டும் என்று மனம் ஏங்கியது.
என் கைகளை இறுக்க பிடித்தான்.. அவன் கண்களை பார்த்தேன்.. “உன்னை முதல் தடவ பாக்கும்போதே எனக்கு உன்ன பிடிச்சு போச்சு காவ்யா”
எனக்குள் கலவையான உணர்ச்சிகள்.. கோவில்.. நமக்கு பிடித்த ஆண்.. நம்மை விரும்புவது. வானில் பறப்பது போன்று இருந்தது.

“நீயும் ரொம்ப அழகா இருக்க காவ்யா….. உன்கிட்ட பிடிச்சதே உன் சிரிப்பும் குழந்தைத்தனமும் தான்”..
இந்த வார்த்தைகளுக்கு உலகில் ஈடே இல்லை..
முதன்முதலாக அவன் கைகளை காதலால் மென்மையாக இறுக்கினேன்…

கொஞ்ச நேரத்தில் மலை உச்சியில் போய் சேர்ந்தோம். அங்கே சென்று சேரும் வரையில் அவர் கைகளை நான் விடவில்லை. அங்கே அம்மாவும், அப்பாவும், பாட்டியும் எங்களுக்காக காத்திருந்தனர். தண்ணீர் வைத்திருந்தனர். முதலில் எனக்கு வாங்கி தந்தான், பின்னர் எனக்கு தந்தான். ஒவ்வொரு கணத்திலும் என்னை உருக வைத்துக்கொண்டிருந்தான்..

சாமி கும்பிட்டு கீழே இறங்க முயலும் போதும். “நாம லாஸ்ட் ஆ போலாமா?” இம்முறை உரிமையோடு கேட்டேன்.
“சரி காவ்யா, எனக்கும் உன்கூட பேச சான்ஸ் கெடச்ச மாதிரி இருக்கும். பெரியவங்களை பாத்துகிட்ட மாதிரியும் இருக்கும்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடன் பேச வாய்ப்புக்காக ஏங்குபவனை பார்த்து மகிழ்வதா? இல்லை.. என் வீட்டு பெரியவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நல்லெண்ணத்தை நினைத்து மகிழ்ந்து பெருமை கொள்வதா?

அவருடைய கல்லூரி கதைகள், என்னுடைய கல்லூரி கதைகள் எல்லாம் பேசி மலையிலிருந்து கீழே இறங்கியபோது எனக்கு அவர் மேல், காதலை தாண்டி அன்பும், அன்யோன்யமும், மரியாதையும் அதிகரித்திருந்தது. இவர் நமக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நம் மேல் அன்பும், நம் குடும்பத்தினர் மேல் மரியாதையும் வைத்திருக்கிறார் என்று ஒரு நம்பிக்கை உருவானது. வீட்டிற்கு திரும்ப வந்தபோது வண்டியில் அசதியில் தூங்கி போனேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *